அஸ்வினியை என் கையாலே தீர்த்துக்கட்டிவிட்டேன் – கொலையாளி அழகேசன் பகீர் வாக்கு மூலம்..!


அஸ்வினையை பிரிந்து என்னால் வாழமுடியாது என்பதால் அவரை கொலை செய்துவிட்டதாக கொலையாளி அழகேசன் பொலிசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் ஹெல்மெட் போடாத காரணத்தினால் தம்பதியினரை பொலிசார் எட்டி உதைத்தில் 3 மாத கர்ப்பிணி பெண் பரிதாபமாக பலியானார்.

பெரும் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம் முடிந்து மூன்று நாட்களே ஆன நிலையில், சென்னையில் நேற்று அஸ்வினி என்ற கல்லூரி மாணவி, அழகேசன் என்பவரால் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

அதன் பின் அழகேசனை கைது செய்த பொலிசார், அவரை முதலில் மருத்துவமனையில் அனுமதித்தனர். முதல் கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் மருத்துவமனையில் இருக்கும் அழகேசனிடம் பொலிசார் வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.

இதில் பொலிசார் விசாரணை நடத்திய போது முதலில் எடுத்தவுடன் அஸ்வினி உயிரோடு இருக்கிறாரா? செத்துவிட்டாரா? என்ற கேள்வியைத்தான் அழகேசன் பொலிசாரிடம் கேட்டுள்ளான்.

இறந்துவிட்டார் என்று தெரிந்தவுடன் அந்த இடத்திலே அழுது கொண்டு, நானும் இனி உயிரோடு இருக்கமாட்டேன் என்று பொலிசாரிடம் பேசத் தொடங்கியுள்ளார்.

எனது பெரிய குடும்பம். நான் எப்போதும் போல் நான் உண்டு என் வேலை உண்டு என்ற படி இருந்தேன். அஸ்வினியாக தான் வந்து முதலில் காதலைச் சொன்னார். நான் அப்போதே சொன்னேன், உன் அழகு எங்கே என் அழகு எங்கே? நான் உனக்கு பொருத்தமானவன் அல்ல, என்று அவரிடம் கூறினேன்


அதற்கு அவர் நான் உங்களை காதலிக்கிறேன், உங்களை திருமணம் செய்து கொண்டால் மகிழ்ச்சியோடு வாழ்வேன் என்று கூறினார்.

அதுமட்டுமின்றி எந்த ஒரு சூழ்நிலையிலும் நான் உங்களை விட்டு பிரியமாட்டேன் என்று சத்தியம் செய்தார். அதன் பின்னே அவரை உயிருக்கு உயிராக காதலிக்க ஆரம்பித்தேன்.

அவள் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்ததால் மேலும் அவளை நல்லபடியாக படிக்க வைக்க வேண்டும் என்று கூறி, 2 லட்சம் ரூபாய் வரை செலவழித்தேன்.

இதற்கிடையில் எங்களின் காதலுக்கு அஸ்வினியின் தாயார் எதிர்ப்பு தெரிவித்தார். கணவன் மனைவி போல் இருந்து வந்த எங்களுக்குள் எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, அஸ்வினி வீட்டில் தனியாக இருந்த போது தாலி கட்டினேன்.

இதற்கு அஸ்வினியும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நான் அவளை ராணி போன்று வைத்திருப்பேன், இந்த பிரச்சனை எல்லாவற்றிற்கும் காரணம் அவள் அம்மாவைத் தான் நான் சொல்லுவேன்.

ஏனெனில் என் மீது பொலிசில் புகார் கொடுத்து அசிங்கப்படுத்தினார். அஸ்வினியை என்னிடமிருந்து பிரித்தார். தாலியை கழற்றி எரிந்தார்.

ஒரு நல்ல பெண்ணுக்கு அழகான மாப்பிள்ளை வேண்டும் என்பதைவிட, நல்ல கணவன் அமையவேண்டும் என்பதுதான் முக்கியம். இதை பெற்றோர்கள் பார்ப்பதில்லை.

என் உயிருக்கு உயிரான அஸ்வினியை என் கையால் தீர்த்துக்கட்டிவிட்டேன், இனிமேல் எனக்கும் இந்த உலக வாழ்க்கை தேவையில்லை என்று கூறியுள்ளார்.-Source: news.lankasri

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!