பப்புவா நியூ கினியா தீவில் திடீர் நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் மக்கள்..!


பப்புவா நியூ கினியா தீவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக,
இன்று அதிகாலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பப்புவா நியூ கினியா தீவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ரபவுல் நகரில் இருந்து சுமார் 135 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்திலும் சுமார் 7.1 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கியதால் அப்பகுதி மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். ஆனாலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 26-ம் தேதி பப்புவா நியூ கினியா தீவில் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100-க்கு மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!