கட்டுப்பாட்டை இழந்த விமானம் விழுந்து நொறுங்கியது – 3 பேர் மரணம்..!


அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், லாரெடோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை காலை பைப்பர்-31 என்ற சிறு விமானம் புறப்பட்டுச் சென்றது. டேக் ஆப் ஆகி உயரே பறந்த சிறிது நேரத்தில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து உடனடியாக லாரெடோ விமான நிலையத்திற்கே விமானத்தை திருப்பினார்.

ஆனால் ஓடுபாதையில் தரையிறக்க முயற்சித்தபோது விமானம் கட்டுப்பாட்டை இழந்ததால், புல்வெளியில் விழுந்து வெடித்து தீப்பிடித்தது. உடனடியாக மீட்புக்குழுவினர் விரைந்து சென்று விமானத்தில் பற்றிய தீயை அணைத்தனர். இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர்.

அந்த விமானம் மார்ஷல் விமான நிறுவனத்தின் சிஇஓ ராபர்ட் மார்ஷல் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் பயணித்தவர்களின் உடல்கள் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. விமான விபத்து காரணமாக லாரெடோ விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!