தமிழ் என்ற சனியனே இருக்கக்கூடாது என சொன்னவர் பெரியார் – சர்ச்சையில் சிக்கிய எச்.ராஜா..!


திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டது தொடர்பாக, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்தினை பதிவு செய்திருந்தார். அதில், ‘இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதிவெறியர் ஈவேரா ராமசாமி சிலை’ என கூறியிருந்தார். அவரது கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எச்.ராஜாவின் கருத்துக்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் வலுத்த நிலையில் அவர் தனது கருத்தை நீக்கியதுடன், வருத்தமும் தெரிவித்தார். எனினும், எச்.ராஜாவுக்கு எதிராக பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தின.


இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பெரியார் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் எச்.ராஜா. திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழ் மொழியே இருக்கக்கூடாது என்பதற்காக தமிழர் மீது திணிக்கப்பட்டதுதான் திராவிடம் என்று கூறினார்.

தமிழ் என்ற சனியனே இருக்கக்கூடாது என்று ஈ.வே.ரா பெரியார் பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், இந்த உண்மைகளை மக்களிடம் எடுத்து சொல்வதால் தான் வசை பாடுகிறார்கள் என்றும் எச்.ராஜா கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!