முகத்தில் அசிங்கமான கருமையை நீக்க இயற்கை ஸ்கிரப்..! முயன்று பாருங்கள் பலன் நிச்சயம்!


சருமம் கருமையாக உள்ளது என்ற கவலை உங்களை வாட்டி எடுக்கின்றதா? இந்தக் கருமையை நீக்க கடைகளில் விற்கப்படும் க்ரீம்களைத் தான் பூச வேண்டும் என்றில்லை. நல்ல முறையில் ஸ்கிரப் செய்வது கூட முகத்தின் கருமையை நீக்கும்.

ஸ்கிரப் என்றவுடனே எந்த பிராண்ட் நல்லது என்று கேட்கத் தோன்றும். கடைகளில் உள்ள ஸ்கிரப்பை உபயோகிக்காமல் வீட்டிலேயே ஸ்கிரப் தயாரிக்க முடியும். இது இயற்கையாகவும் செலவின்றியும் கிடைப்பதோடு முகத்தின் கருமையையும் இயற்கை வழியில் போக்கும்.

அது எப்படி என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

சிறிதளவு வெண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் முகம் வெண்ணெய் போலவே மிருதுவாக மாறும். உங்களுக்கு பிரகாசமான முகம் கிடைப்பதும் உறுதி.

தக்காளி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். வீட்டில் தக்காளி, வெள்ளாரிக்காய் ஆகியவற்றை நறுக்கும் போது எல்லாம், முகத்திற்கும் சிறிதளவு எடுத்து போட்டுக் கொள்வது நல்லது.


ஓட்ஸை பொடி செய்து அதனுடன் தக்காளி சாற்றினையும், தயிரையும் கலந்து முகத்தில் குறிப்பாக வாயை சுற்றி பூசுங்கள். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவுங்கள். விரைவில் பலன் கிடைக்க, வாரம் மூன்று முறையாவது இவ்வாறு செய்யுங்கள்.

பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து, பின் கழுவ வேண்டும். வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் இதனை செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும்.

ரோஸ்வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.

வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு அவதானிக்கலாம்.


தினமும் குளிப்பதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லுடன் மஞ்சளை கலந்து மசாஜ் செய்து பின்னர் குளித்தால், முகப்பருக்கள் இல்லாத தெளிவான சருமத்தை பெறலாம்.

தினமும் குளிப்பதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லுடன் மஞ்சளை கலந்து மசாஜ் செய்து பின்னர் குளித்தால், முகப்பருக்கள் இல்லாத தெளிவான சருமத்தை பெறலாம்.

சோப்பிற்கு பதிலாக பாசிப் பயறு மாவு, கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை பயன்படுத்தினால், முகத்திற்கு ஒரு தனி கவர்ச்சியே கிடைக்கும். உங்களது அழகு பல்லாண்டு காலம் நீடித்திருக்கும்.

தினமும் இரவு உறங்குவதற்கு முன்னர் சிறிதளவு பாலில், மஞ்சளை கலந்து பேக் போட்டுக் கொண்டால், முகம் வசீகரமாக இருக்கும். தினமும் காலையில் உங்களது முகத்தில் ஒரு ஒளியை காணமுடியும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!