ராஜீவ் காந்தி கொலை – ரவிச்சந்திரன் பரோலில் செல்ல மதுரை ஐகோர்ட் அனுமதி…!


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 2 வாரம் பரோல் அளித்து மதுரை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர் ரவிச்சந்திரன்.

இந்த 25 ஆண்டு சிறை வாசத்திற்கு இடையே அவருக்கு 3 முறை பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, குடும்ப சொத்து பாகப்பிரிவினைக்காகவும், தனது தாயாரை பார்க்கவும் ஒரு மாதம் பரோல் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நடந்து வந்தது. இந்த மனு மீது இன்றும் விசாரணை நடைபெற்றது. வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்ததும், ரவிச்சந்திரனுக்கு 2 வாரம் காலம் பரோல் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!