உல்லாசத்துக்கு இடையூறு – சிறுவனைக் கொன்ற தாயின் கள்ளக்காதலன்.!


சென்னை MGR நகரை அடுத்த பாரதிநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களது மகன் விசேஷ்சாய். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை அருகில் உள்ள டியூசன் சென்டருக்கு சென்ற விசேஷ்சாய் பின்னர் திரும்பிவரவில்லை.

இது குறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மாணவனின் தாய் மஞ்சுளாவுக்கும் சேலையூரில் தங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நாகராஜுக்கும் கள்ளக்காதல் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் சேலையூரில் பூட்டி இருந்த நாகராஜின் அறைக்கதவை உடைத்து சென்று பார்த்தனர்.

அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மாணவன் விசேஷ்சாய் கொலை செய்யப்பட்டு கிடந்தான். அறை முழுவதும் ரத்தமாக காணப்பட்டது. விசேஷ்சாயை, கழுத்தை அறுத்து கொன்று விட்டு நாகராஜ் தப்பி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

மனைவி மஞ்சுளாவுக்கும் நாகராஜுக்கும் தொடர்பு இருப்பது தெரிந்ததும் இருவரையும் கார்த்திகேயன் கண்டித்து உள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

மேலும் மாணவன் விசேஷ்சாயை அடிக்கடி நாகராஜ் டியூசனுக்கு அழைத்து சென்று விட்டு வந்தார். எனவே கள்ளக்காதலுக்கு இடையூறு ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் மாணவனை கடத்தி கொலை செய்து இருப்பது தெரிந்தது. நாகராஜ் சிக்கினால் தான் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா?

என்பது தெரியவரும். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை தொடர்பாக மாணவனின் தாய் மஞ்சுளாவிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.-Source: asianetnews.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!