உயிரணு மூலம் சிறுவனைக் காப்பாற்றிய விஞ்ஞானிகள்.!


ஜெர்மனி நாட்டில், கடும்நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் சிதைந்த தோலை, மரபணு மாற்றப்பட்ட உயிரணு மூலம் மீண்டும் வளரச் செய்து ஜெர்மன் விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ள​னர்.

ஜெர்மனியில் உள்ள ரூர் பல்கலைக் கழகத்தின் குழந்தைகள் மருத்துவமனையில், உடலின் பெரும்பான்மையான தோல் பகுதி, முழுவதும் சிதைந்த நிலையில், 7 வயது சிறுவன் அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு மரபணு மாற்ற உயிரணு மூலம் சிகிச்சை அளித்து மருத்துவர்கள் குணப்படுத்தி உள்ளனர்.

மரபணு மாற்ற சிகிச்சை குறித்து ஆய்வு செய்து வரும் மைக்கேல் டி லூகா எனும் ஆய்வாளரின் வழிகாட்டுதல் படி, சிறுவனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட தோல் பகுதியில் மரபணு மாற்ற உயிரணுக்களைச் செலுத்தி உள்ளனர். இதில், வளர்ச்சியடைந்த அந்த தோல் பகுதியை சிறுவனின் சிதைந்த தோல் பகுதிகளில் பொருத்தி சீரமைக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறுவனின் சிதைந்த தோல் பகுதி, இயல்பாக காணப்படும் தோற்றத்துடன் வளர்ச்சி அடைந்து குணமடைந்துள்ளது. உலகில் முதல் முறையாக கடும் நோய்களால் சிதைந்த தோல் பகுதியை மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரணு மூலம் வளரச்செய்யும் சிகிச்சையில் ஜெர்மணி விஞ்ஞானிகள் வெற்றியடைந்துள்ளதாக ஜர்னல் நேச்சர் மருத்துவ ஆய்விதழ் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!