பிரபல ‘செக்ஸ் குரு’ தாய்லாந்தில் ரஷிய ஜோடிகளை வைத்து செய்த விபரீதம்..!


தாய்லாந்து நாட்டில் உள்ள பட்டயா நகரம் உலக அளவில் விபசாரத்துக்கு மிகவும் பிரபலமான பகுதியாகும். இங்குள்ள விபசார விடுதிகள், மற்றும் நிர்வாண நடனக்கூடங்களில் ரஷியாவை சேர்ந்த இளம்பெண்கள் பரவலாக காணப்படுகின்றனர்.

ரஷியா நாட்டின் பிரபல ’செக்ஸ் குரு’ என்றழைக்கபடும் அலெக்ஸ் லெஸ்லி என்பவரை பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் அலெக்ஸ் லெஸ்லியை 36 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பின்தொடருகின்றனர்.

அலெக்சான்டர் கிரிலோவ் என்ற இயற்பெயரை கொண்ட இவர், இந்த ஆண்டு நடைபெறவுள்ள ரஷிய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதினை எதிர்த்து போட்டியிடப் போவதாக கூறி சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.


இந்நிலையில், பிப்ரவரி 17-ம் தேதியில் இருந்து பட்டயா நகரில் செக்ஸ் பயிற்சி வகுப்புகளை நடத்தப் போவதாக தனது இணையதளத்தில் அறிவித்திருந்தார்.

கடந்த 10 நாட்களாக பட்டயா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்ற இவரது செக்ஸ் பயிற்சி வகுப்பில் சுமார் 30 ஆயிரம் கட்டணம் செலுத்தி 40 ஆண், பெண்கள் பங்கேற்றதாக தெரியவந்தது. இந்த பயிற்சி வகுப்புகள் தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் அலெக்ஸ் லெஸ்லி வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து, அந்த ஓட்டலில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், அலெக்ஸ் லெஸ்லி உள்பட 10 செக்ஸ் பயிற்சியாளர்களை கைது செய்துள்ளனர். ரஷியாவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த பயிற்சியை அளித்ததால் மேற்படி குற்றச்சாட்டின்கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

எனினும், முறையான பாஸ்போர்ட் இல்லாமல் தாய்லாந்துக்குள் நுழைந்தது, அனுமதி இன்றி இங்கு பணியாற்றியது மற்றும் விசா காலம் காலாவதியான பின்னரும் இங்கு தங்கி இருந்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!