நடிகை ஸ்ரீதேவியின் மரணம் பற்றி தடயவியல் அறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!


ஸ்ரீதேவி குளியல் தொட்டியின் தண்ணீரில் மூழ்கியதால் மரணம் ஏற்பட்டதாக தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளியல் தொட்டியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது, ஆனால் அவர் ஓட்டல் அறையில் குளியல் தொட்டியில் இறங்கிய போது எதிர் பாராத விதமாக நீரில் மூழ்கியதாகவும், அதனால் மாரடைப்பு ஏற்பட்டதாக தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீதேவியின் மரணத்தில் எந்த குற்ற நோக்கமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.


நடிகை ஸ்ரீ தேவி கடந்த வாரம் தனது உறவினரின் திருமணத்திற்கு குடும்பத்தினருடன் துபாய் சென்று இருந்தார். திருமணம் முடிந்து அவரது கணவர் போனி கபூர் மற்றும் மூத்த மகள் ஜான்வி கபூர் இருவரும் மும்பை திரும்பிவிட்டனர். ஸ்ரீதேவியும் தனது இரண்டாவது மகளும் துபாயில் தங்கிவிட்டனர். ஷாப்பிங் செல்ல வேண்டும் என்று கூறி ஸ்ரீ தேவி தங்கிவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், போனி கபூர் தனது மனைவி ஸ்ரீ தேவிக்கு ”ஆச்சரிய விருந்து” அளிப்பதற்காக மீண்டும் சனிக்கிழமை துபாய் சென்றார்.

இருவரும் தங்களது அறையில் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்துள்ளனர். பின்னர் ஸ்ரீ தேவி குளியலறைக்குள் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட மரணம் இந்திய திரைத் துறையையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!