துப்பாக்கி குடோனில் பாதுகாப்பு பணியில் இருந்தவரை வந்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியில்…!


ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையத்தில் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி மையம் உள்ளது. இங்கு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கைலாஷ்சந்தர்ராய் (வயது 23).

கடந்த 8 மாதமாக பயிற்சி பெற்று வந்தார். இன்று காலை அவருக்கு பயிற்சி மையத்தில் உள்ள துப்பாக்கி குடோனில் பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.

கைலாஷ்சந்தர்ராய் பணியில் இருந்த போது திடீரென அங்கிருந்த துப்பாக்கியால் தனது நெற்றியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.


துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அதிகாரிகள் வந்து பார்த்த போது கைலாஷ் சந்தர்ராய் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாக கைலாஷ் சந்தர்ராய் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. அடுத்த மாதம் பயிற்சி முடிந்து அவர் ஊர் திரும்ப இருந்தார். தற்போது அவர் தற்கொலை செய்து இருப்பது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.

உயர் அதிகாரிகளின் நெருக்கடி மற்றும் பணிச்சுமை காரணமாக கைலாஷ் சந்தர்ராய் தற்கொலை செய்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!