ஆந்திராவில் வெறி நாய்கள் 4 வயது குழந்தையை கடித்து குதறி அரை கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றன. குழந்தை பரிதாபமாக இறந்தது.
ஆந்திரமாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி தனது மனைவியுன் விவசாய வேலைக்கு சென்றார். அப்போது தங்கள் 4 வயது மகன் இப்ராகிமையும் தூக்கிச் சென்றனர்.
சிறுவன் தூங்கி கொண்டு இருந்ததால் ஒரு மரத்தில் தொட்டிலில் கட்டிவிட்டு தாங்கள் வயல் வெளியில் வேலைபார்த்து கொண்டு இருந்தனர்.
சிறிது நேரம் கழித்து பார்க்கும் போது தொட்டிலில் குழந்தையை காணவில்லை. உடனடியாக பெற்றோர்கள் குழந்தையை தேடிப்பார்த்தனர். அப்போது குழந்தையின் உடல் அரை கிலோமீட்டர் தூரத்தில் கிடந்து.
குழந்தையை கடித்து இழுத்துச் சென்ற நாய்கள் அங்கு குழந்தையின் உடலை வைத்து சண்டைபோட்டு கொண்டு இருந்தன. உடனடியாக பெற்றோர்கள் குழந்தையை மீட்டனர், ஆனால் குழந்தை இறந்து விட்டது. – Source : dailythanthi.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!