வீட்டிலிருந்தே சருமத்தின் பொலிவை அதிகரிக்க செய்யும் இயற்கை வழிகள்..!


தற்போதெல்லாம் முகம் பொலிவு பெற வேண்டுமானால் ஆண் பெண் வேறுபாடின்றி அனைவரும் அழகு நிலையங்களுக்கு சென்றுவிடுகின்றனர். ஆனால் வீட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே முகத்தை பொலிவு பெறச் செய்யலாம். ஆம்! பின்வருவனவற்றை செய்து பாருங்கள்! முகம் நிச்சயம் பொலிவு பெறும்.

01. கடலை மாவை எலுமிச்சம் பழச்சாறில் குழைத்து, சோப்புக்குப் பதில் உபயோகிக்கலாம். இதேபோன்று, கோதுமைத் தவிட்டையும் உபயோகிக்கலாம். இதனால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதாக உதிர்ந்து தேகம் புத்துணர்வு பெறும்.

02. நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீராவியில் முகத்தைக் காட்டினால், முகத்தின் நுண்ணிய வியர்வைத் துவாரங்களில் உள்ள அழுக்குகள் வெளியேறும். பருக்கள் வராது.


03. விட்டமின் ஈ மாத்திரைகளை வாங்கி, அதனுள் இருக்கும் எண்ணெயை எடுத்து முகச்சுருக்கங்களில் தடவி மாசாஜ் செய்து வந்தால், சுருக்கங்கள் மறைந்து முகம் அழகாக இருக்கும்.

04. வேப்பிலையை தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க வைத்து அந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகம் பளபளப்பு அடையும். முக அழகைக் கெடுக்கும் தேமலை அகற்ற எலுமிச்சம் பழச்சாறுடன் துளசி இலைச்சாறையும் சேர்த்துத் தடவி வரவேண்டும்.

05. முகத்துக்கு மேக்கப் போடுவதற்குமுன் லேசாக முகம் முழுவதும் பன்னீரைத் தடவினால், சருமம் மென்மையாக இருக்கும். நீண்ட நேரம் மேக்கப் கலையாமலும் இருக்கும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!