கொழும்பை விட்டுப் புறப்பட்டன ஈரானிய நாசகாரிகள்…!


நான்கு நாட்களாக கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்ற ஈரானிய கடற்படையின் நாசகாரிப் போர்க்கப்பல்கள் அணி நேற்று புறப்பட்டுச் சென்றது.

ஈரானிய கடற்படையின் 50 ஆவது கப்பல் அணியைச் சேர்ந்த ரொன்ப் என்ற விநியோக மற்றும் போர்க்கப்பல், நாசகாரி கப்பல்களான நக்டி மற்றும் பயன்டோர் ஆகியன, நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக கடந்தவாரம் கொழும்பு வந்தன.

இந்தியப் பெருங்கடல் மற்றும் அனைத்துலக கடலில் தமது பயணத்தின் ஒரு அங்கமாகவே இந்தப் போர்க்கப்பல்கள் அணி கொழும்பு வந்தது.

இதன்போது சிறிலங்கா கடற்படையினர் வரவேற்பு அளித்ததுடன், ஈரானிய கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றனர்.

நேற்று இந்தப் போர்க்கப்பல்கள் தமது நான்கு நாள் பயணத்தை முடித்தக் கொண்டு கொழும்புத் துறைமுகத்தை விட்டு புறப்பட்டுச் சென்றன. – Source : puthinappalakai.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!