சைப் அலிகானின் பாசத்திற்காக ஏங்கும் செல்ல குழந்தை… யாருடைய குழந்தை தெரியுமா?


பாலிவுட் நடிகர் சைப் அலிகானுக்கும் நடிகை கரீனா கபூருக்கும் கடந்த வருடம் தைமூர் அலிகான் என்ற அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இந்த அழகிய குழந்தையை சாதாரண ஒரு குழந்தை போல வளர்க்க இருவரும் ஆசைப்படுவதாக கரீனா கபூர் தெரிவித்துள்ளார். எனினும், தைமூர் அலிகான் பாலிவுட்டில் செல்ல குழந்தையாக வலம் வருகிறாராம்.


தனது அப்பா சைப் அலிகான் எப்போதும் படப்பிடிப்பிற்கு வீட்டை விட்டு கிளம்பினாலும் அவரை போக விடாமல் அழுது கொண்டே இருப்பாராம். இதனை கரீனா கபூர் சமீபத்திய பேட்டியில் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் மீண்டும் வீட்டிற்கு வரும்வரை தைமூர் சோகமாக இருப்பானாம். இதேவேளை, கரீனா கபூர் வெளியே சென்று விட்டால் அப்பாவுடன் சந்தோசமாக விளையாடிக் கொண்டிருப்பதாகவும் கரீனா கபூர் குறிப்பிட்டுள்ளார். – Source : lankasee.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!