மரண வாக்குமூலத்துக்காக 300 அடி தூரம் தவழ்ந்து வந்த வீரப் பெண் – நடந்தது என்ன..?


பல முறை கத்தியால் குத்தப்பட்டு, ஓடும் காரில் இருந்து இளம்பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்டு 300 அடி தூரம் தவழ்ந்தே வந்து மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.இச்சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 19 வயதான லிஸ் க்யொஸ்டா (Liz Cuesta ) என்ற பெண், காரிலிருந்து வீசப்பட்டார்.

ஆனால், தனது உயிரை விடாமல் இறுகப்பிடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கில், ரத்தம் சொட்ட சொட்ட 300 அடி தூரத்துக்கு தவழ்ந்தவாறே பிரதான சாலைக்கு வந்துள்ளார்.சான் ஜோஸ் அருகே உள்ள மலை சாலையில் ரத்த வெள்ளத்தில் குறித்த இளம்பெண் இருப்பதைப் பார்த்தவர்கள் மீட்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினர்.இதனைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்டு மருத்துவமனை அழைத்துச் சென்றனர்.

இருப்பினும் குறித்த பெண் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.அவர் கொடுத்த மரண வாக்குமூல அடிப்படையில், சந்தேகத்துக்கு இடமான இருவரை பிடித்து பொலிசார் விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்.-Source: lankasee

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!