ஸ்ரீதேவி மகளின் காதை கடித்த வாரிசு நடிகர் – விளாசும் நெட்டிசன்ஸ்!

பவால் பட விளம்பர போட்டோஷூட்டின்போது ஜான்வி கபூரின் காதை கடித்த நடிகர் வருண் தவானை சமூக வலைதளவாசிகள் விளாசி வருகிறார்கள்.

போட்டோஷூட்டின்போது ஜான்வி கபூரின் இடது காதை கடித்த வருண் தவானை சமூக வலைதளவாசிகள் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், வருண் தவான் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பவால் பாலிவுட் படம் ஜூலை 21ம் தேதி அதாவது நாளை அமேசான் பிரைமில் வெளியாகவிருக்கிறது.

அந்த படத்தில் வருண் தவானின் மனைவியாக நடித்திருக்கிறர் ஜான்வி கபூர். வருண் தவானும், ஜான்வியும் சேர்ந்து படத்தை விளம்பரம் செய்து வருகிறார்கள். மேலும் ஜோடியாக போட்டோஷூட்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

​வருண் தவான்​
ஜான்வியும், வருண் தவானும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஜான்வி. அந்த போட்டோஷூட்டின்போது ஜான்வியின் காதை கடித்திருக்கிறார் வருண் தவான். அதை பார்த்த சமூக வலைதளவாசிகள் முகம் சுளித்துள்ளனர்.

​விளாசல்​
சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது, திருமணமான ஒரு நடிகர் இப்படி செய்வது ரொம்ப மோசமானது. படத்திற்காக செய்தால் பரவாயில்லை, ஆனால் போட்டோஷூட்டில் இப்படி செய்யலாமா வருண்? .தன்னுடன் நடிக்கும் நடிகைகளை தொடுவதும், அவர்கள் எதுவும் சொல்லாததால் எஸ்கேப் ஆவதும் வருணுக்கு வழக்கமாகிவிட்டது. வருண் சிங்கிளாக இருந்திருந்தாலும் கூட ஜான்வியின் காதை கடித்தது தவறு தான் என்கிறார்கள்.

​கியாரா அத்வானி​
மேலும் சில சமூக வலைதளவாசிகளோ, ஜான்வியும், வருண் தவானும் நண்பர்கள். அவர் தன் காதை கடித்ததில் ஜான்விக்கே பிரச்சனை இல்லை. அப்படி இருக்கும்போது உங்களுக்கு என்ன வந்தது என கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னதாக கியாரா அத்வானியுடன் நடந்த போட்டோஷூட்டின்போது அவரின் கன்னத்தில் முத்தமிட்டார் வருண். அப்பொழுதும் சமூக வலைதளவாசிகள் அவரை விளாசினார்கள்.

​மும்பை​
பவால் படத்தை பிரபலங்களுக்காக ஜூலை 18ம் தேதி மும்பையில் திரையிட்டார்கள். அதில் கரண் ஜோஹர், தமன்னா, அர்ஜுன் கபூர், சித்தாந்த் சதுர்வேதி, குஷி கபூர் என பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

பவால் படம் பார்த்த பாலிவுட் நடிகரும், ஜான்வி கபூரின் அண்ணனுமான அர்ஜுன் கபூர் கூறியிருப்பதாவது, இது வித்தியாசமான, அழகான கதை. எனக்கு இந்த காதல் கதை மிகவும் பிடித்திருக்கிறது. உறவுகள், வாழ்க்கை குறித்து நம்மை வியக்க வைக்கிறது இந்த படம் என்றார்.

​கரண் ஜோஹர்​

பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் கூறியிருப்பதாவது, இது வித்தியாசமான, ஒரிஜினல் காதல் கதை. படத்தின் பல இடங்களில் நெகிழ்ந்துவிட்டேன். வருண் தவான், ஜான்வி கபூரின் கெரியரிலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் படம் இது. அவர்கள் தான் பவால் படத்தின் இதயத்துடிப்பு என தெரிவித்துள்ளார்.

​ஸ்ரீதேவி​

முன்னதாக பவால் படத்தை விளம்பரம் செய்ய ஜான்வி கபூரும், வருண் தவானும் துபாய் சென்றார்கள். அங்கு அளித்த பேட்டி ஒன்றில் ஜான்வி கூறியதாவது, என் அம்மா அப்பொழுது ஒரே நேரத்தில் 4 படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

அந்த நான்கு படங்களிலும் ஒரே ஹீரோ தான். அந்த காலத்தில் எல்லாம் பாடலை ஊட்டியில் தான் ஷூட் செய்வார்கள். நான்கு பட பாடல் ஷூட்டும் ஊட்டியில் நடந்தது. ஹீரோவின் விக்கை வைத்து தான் எந்த படம் என்பதை அம்மா கண்டுபிடித்திருக்கிறார். படத்திற்கு படம் விக் மாறியிருக்கிறது. ஆனால் அந்த ஹீரோ யார் என்று அம்மா சொல்லவில்லை என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!