மரணம் நெருங்குது… இளம்பெண் கடத்தலில் சைக்கோ கணவரின் பகீர் ஆடியோ.!

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் பல்லவராயன்பத்தை கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடையில் இந்தப்பழக்கம் காதலாக மாறியது. இந்த காதலுக்கு உமா மகேஸ்வரி வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனையடுத்து கடந்த 2022 டிசம்பர் 4-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி மாரிமுத்துவை திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து மயிலாடுதுறையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

திருமணமான 4 மாதத்தில் தாய் தனலெட்சுமியை தொடர்பு கொண்ட மகேஸ்வரி தனது கணவன் சைக்கோ போல தன் மீது சந்தேகப்படுவதாகவும் அடுத்து துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து தனலெட்சுமி தனது உறவினர்களுடன் மகள் வீட்டுக்கு சென்றுள்ளார். மாரிமுத்துவிடம் இருந்து தனலெட்சுமியை பிரித்து அவரது தாய் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது வீட்டை விட்டா போகிறாய் நீ எப்படி உயிரோடு இருக்கிறாய் என பார்க்கிறேன் என மாரிமுத்து மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் 20-ஆம் தேதி இரவு 7 மணியளவில் காரில் சில நபர்களுடன் வந்த மாரிமுத்து, ஆராயத்தெரு என்ற இடத்தில் தாயாருடன் சாலையில் நடந்துசென்ற உமாமகேஸ்வரியை வழிமறித்து, அவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து, தனலெட்சுமி அன்றிரவே மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்து சுமார் ஒருமாதமாகும் நிலையில், இதுவரை தனது மகள் குறித்த எந்த தகவலும் கிடைக்காததால், நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அப்போது, கணவனை பிரிந்து தாயாருடன் வசித்தபோது, உமாமகேஸ்வரிக்கு கொலை மிரட்டல் விடுத்து மாரிமுத்து பேசிய ஆடியோ பதிவினை அவர் போலீசாரிடம் வழங்கி, தனது மகளை மீட்டுத் தர வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.அதில் உன் உயிர் ஊஞ்சலாடுது, மரணம் நெருங்குது என அவர் கூறி உள்ளார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!