நேபாள பிரதமரின் மனைவி மாரடைப்பால் மரணம்!

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலின் மனைவி மாரடைப்பால் இன்று காலமானார்.

நேபாள நாட்டு பிரதமராக இருப்பவர் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா. இவரது மனைவி சீதா தஹால். நீண்ட காலம் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்து உள்ளார்.

இதற்காக சிகிச்சையும் பெற்று வந்து உள்ளார். அவர் காத்மண்டு நகரில் உள்ள நார்விச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து உள்ளார்.

பார்கின்சன் வகையை சேர்ந்த ஒரு சிக்கலான வியாதியால் நீண்டகாலம் அவர் அவதிப்பட்டு வந்து உள்ளார். இந்நிலையில், இன்று காலை 8.33 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

மாரடைப்பால் அவர் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!