மோசடியில் சிக்கி தலைமறைவான நீரவ் மோடி, அமெரிக்காவில் குடும்பத்துடன் பதுங்கல்!


வங்கி மோசடியில் சிக்கி தலைமறைவான நீரவ் மோடி, அமெரிக்காவில் குடும்பத்துடன் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரியான நிரவ் மோடி உலகம் முழுவதும் பல இடங்களில் தனது நகைக்கடைகளை வைத்துள்ளார்.

இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து சுமார் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக வங்கி சார்பில் சி.பி.ஐ.யிடம் நேற்று இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, 31-ம் தேதி அவரது நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் தேடப்படுவதாக ஜனவரி 31ம் தேதியே சி.பி.ஐ. அறிவித்தது. ஆனால் கடந்த ஜனவரி 1-ம் தேதியே நிரவ்மோடி நாட்டைவிட்டு வெளியேறியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்த நிலையில் நீரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.5,100 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தங்கம், வைரம் உள்ளிட்ட பொருட்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இவர் தற்போது அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் எஸ்க்ஸ்ஹவுஸ் அப்பார்ட்மென்டில் பதுங்கியிருப்பதாக புது தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் மல்லையா, லலித் மோடி, வரிசையில் தற்போது நீரவ் மோடியும், இடம் பெற்றுள்ளதால் இதுகுறித்து பதிலளிக்குமாறு, பிரதமர் மோடிக்கு பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பியுள்ளனர். – Source : tamil.samayam.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!