பிரேக்கப் பார்ட்டி வைத்து டான்ஸ் ஆடிய சர்ச்சை நடிகை!

தனக்கு விவாகரத்து கிடைத்த சந்தோஷத்தில் பிரேக்கப் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து புத்தாடை அணிந்து டான்ஸ் ஆடியிருக்கிறார் நடிகை ராக்கி சாவந்த்.

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும் திருமணத்திற்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ரித்தேஷை திருமணம் செய்து பிரிந்தார்.


அதன் பிறகு ஆதில் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆதில் தனக்காக துபாயில் வீடு வாங்கிக் கொடுத்திருப்பதாக கூறினார்.

மேலும் தான் ஆதில் கானுக்காக இஸ்லாத்திற்கு மாறியதாக தெரிவித்தார் ராக்கி. தன் பெயரை பாத்திமா என மாற்றிக் கொண்டார்.

திருமணமான சில வாரத்திலேயே ஆதில் மீது மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ராக்கி. அவர் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்துவதுடன், தன் பணத்தை துஷ்பிரயோகம் செய்வதாக போலீசில் தெரிவித்தார்.

அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆதில் கானை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தார்கள்.

ஆதில் என்னை வைத்து சினிமாவில் பெரிய ஆளாகப் பார்க்கிறார். தயவு செய்து யாரும் அவரை கண்டுகொள்ள வேண்டாம் என கோரிக்கை விடுத்தார் ராக்கி.

ஆதிலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக செய்தியாளர்களிடம் கூறி கண்ணீர்விட்டார். அதன் பிறகு விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார். ஆதிலுக்கும், ராக்கி சாவந்துக்கும் விவாகரத்து வழங்கிவிட்டது நீதிமன்றம்.

இந்நிலையில் தனக்கு விவாகரத்து கிடைத்ததை பார்ட்டி வைத்து கொண்டாடியிருக்கிறார் ராக்கி சாவந்த். திருமண பெண் போன்று உடை அணிந்து செய்தியாளர்கள் முன்பு சந்தோஷமாக டான்ஸ் ஆடினார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஒரு வழியாக எனக்கு விவாகரத்து கிடைத்துவிட்டது. மற்றவர்கள் கவலைப்படுவார்கள். ஆனால் நான் சந்தோஷமாக இருக்கிறேன். ஸ்டார்ட் மியூசிக் என்று கூறி டான்ஸ் ஆடி மகிழ்ந்தார்.

அதை பார்த்த செய்தியாளர்களோ, உங்கள் வாழ்க்கையில் அடுத்து யார் வரப் போகிறார் என கேட்டார்கள். யாரும் கிடையாது என்று சொல்லிவிட்டு இடத்தை காலி செய்தார்.

முன்னதாக ரித்தேஷை திருமணம் செய்த போதிலும் அவர் யார் என்று சொல்லாமல் இருந்தார் ராக்கி. இதனால் ராக்கி பொய் சொல்கிறார் என்றார்கள்.

அதன் பிறகு ரித்தேஷுடன் சேர்ந்து இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 15வது சீசனில் ஜோடியாக கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு ராக்கியும், ரித்தேஷும் பிரிந்துவிட்டார்கள்.

ரித்தேஷ் மீது ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ராக்கி சாவந்த். அவர் தன் சமூக வலைதள கணக்குகளை ஹேக் செய்துவிட்டதாக தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து அழுதார்.

இதையடுத்து ராக்கியை சட்டப்படி சந்திப்பேன் என ரித்தேஷ் தெரிவித்தார். ரித்தேஷ் கூறியதாவது,

ராக்கியின் புகார்களுக்கு நான் சட்டப்படி பதில் அளிப்பேன். நான் அவருக்காக கோடிக் கணக்கில் செலவு செய்தேன். என் பணத்தை வாங்கியதில் அவருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் நான் அவருக்காக செலவு செய்வதை நிறுத்தியதும் என் மீது இப்படி புகார் தெரிவித்துள்ளார். ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டால் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. நான் கேள்விப்பட்டது இல்லை.

என் பெயரை கெடுக்க அவர் மேலும் புகார் தெரிவிக்கலாம். நானும், ஆதிலும் சேர்ந்து பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல விரும்புகிறோம் என ராக்கி சொல்லலாம். அவரால் மட்டுமே இப்படி எல்லாம் நாடகம் ஆட முடியும். நான் அவரிடம் இருந்து தள்ளி இருக்கிறேன், சந்தோஷமாக இருக்கிறேன் என்றார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!