சிறுமியை சங்கிலியால் கட்டி ஓராண்டாக சீரழித்த சாமியார் அதிரடி கைது!

பெற்றோரை இழந்து அநாதையான 15 வயது சிறுமியை தனது அறையில் அடைத்து சங்கிலியால் கட்டிவைத்து ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரது பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன் அடுத்தடுத்து இறந்துவிட்டனர்.

அந்த சிறுமிக்கு உறவினர்கள் யாரும் ஆதரவு கொடுக்கவில்லை. இதனால் அவரை அப்பகுதி மக்கள் சிலர் விசாகப்பட்டினம் புது வெங்கோஜிபாலத்தில் உள்ள பூர்ணானந்தா ஆசிரமத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு சேர்த்துள்ளனர்.

அந்த சிறுமி, ஆசிரமத்தில் உள்ள பசுக்களுக்கு தீவனம் கொடுப்பது, சாணம் அள்ளுவது போன்ற பணிகளை செய்து வந்துள்ளார். சாமியார் பூர்ணானந்தா, தனக்கும் சேவை செய்யவேண்டும் என சிறுமியிடம் கூறியுள்ளார். அதன்படி பணிகள் முடித்துவிட்டு தினசரி சாமியாரின் அறைக்கு சிறுமி சென்றுள்ளார்.

அப்போது சிறுமியை தனது ஆசைக்கு இணங்கும்படி சாமியார் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்து தப்ப முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த சாமியார், சிறுமியை சங்கிலியால் கட்டி ஒரு அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதேபோல் அடிக்கடி சிறுமியை சாமியார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் உணவு, தண்ணீர் என எதையும் வழங்காமல் அடிக்கடி சித்ரவதை செய்துள்ளார். சிறுமி இயற்கை உபாதை கழிக்க கேட்டாலும் அதற்கும் அனுமதி தராமல் சங்கிலியை கழற்றாமல் சித்ரவதை செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 13ம்தேதி சாமியாரின் அறையை சுத்தம் செய்ய பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது சிறுமி, அந்த பெண்ணிடம் தனது நிலையைக்கூறி கதறி அழுதுள்ளார். அப்போது அங்கு யாரும் இல்லாததால் அந்த பெண், சங்கிலியில் இருந்து விடுவித்து சிறுமியை விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் கொண்டு வந்து விட்டுள்ளார்.


இதையடுத்து அங்கிருந்து திருமலா எக்ஸ்பிரஸ் ரயிலில் சிறுமி ஏறினார். கிழிந்த ஆடைகளுடன் இருந்த சிறுமியின் நிலைக்கண்டு சக பயணிகள் விசாரித்தனர். அப்போது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி கூறினாள்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அந்த சிறுமிக்கு உணவு, தண்ணீர் வாங்கிக்கொடுத்து கிருஷ்ணா மாவட்டம் காங்கிபாடு பகுதியில் உள்ள காப்பகத்தில் சேர்க்க அழைத்துச்சென்றனர். அங்கு விசாரித்த காப்பக நிர்வாகிகள் சிறுமிக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து போலீசாரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

அதன்பேரில் போலீசார் உடனடியாக காப்பகத்திற்கு வந்து சிறுமியிடம் விசாரித்தனர். இதையடுத்து விஜயவாடாவில் உள்ள திஷா காவல் நிலைய போலீசார் ேபாக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து சாமியார் பூர்ணானந்தாவை நள்ளிரவில் கைது செய்தனர்.

சிறுமிகளை பலாத்காரம் செய்து கருக்கலைப்பு?


சாமியார் பூர்ணானந்தா அந்த ஆசிரமத்தை கடந்த 10 ஆண்டாக நடத்தி வருகிறார். அங்கு பெரும்பாலும் தனக்கு சேவை செய்ய சிறுமிகள்தான் வேண்டும் என கேட்பாராம். அதன்படி அவரிடம் 10க்கும் மேற்பட்ட சிறுமிகள் இருந்துள்ளனர்.

ஆசிரம பணிகளை முடித்த பிறகு அவர்களை இரவில் சாமியார் தனது அறைக்கு அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிகள் கருவுற்றால், மாத்திரை கொடுத்து அவர்களுக்கு கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆசிரமத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: dinakaran * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!