டெல்லியில் 24 மணி நேரத்தில் 3 பேர் மரணம்..!

டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தில் உள்ள ஆர்யபட்டா கல்லூரியில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் நிகில் சவுகான் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

புதுடெல்லி தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று கொலைகள் நடந்துள்ளன.

சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சகோதரிகள் கொல்லப்பட்டனர். இரண்டாவது சம்பவம் டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தில் நடந்துள்ளது. இதில், கத்திக்குத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

டெல்லியின் ஆர்.கே.புரம் அம்பேத்கர் பஸ்தியில்,சனிக்கிழமை இரவில் பிங்கி(30) ஜோதி(29) சகோதரிகள் துப்பாக்கியால் சுட்டு கொல்லபட்டனர். பணத்தகராறில் இரண்டு சகோதரிகள் கொல்லபட்டதாக கூறப்படுகிறது.

சகோதரரான லலித் மற்றும் சகோதரிகளுக்கு இடையேயான கொடுக்கல் வாங்கல் தகராறு தொடர்பாக கொலை நடந்து உள்ளது.

இந்த கொலை வழக்கில் அருண் மற்றும் மைக்கேல் உள்பட 3 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து உள்ளனர்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தில் உள்ள ஆர்யபட்டா கல்லூரியில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் நிகில் சவுகான் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

உயிரிழந்த நிகில் சவுகானின் காதலி கடந்த 7 நாட்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இதனை தட்டிகேட்ட மாணவரை ஒரு கும்பல் தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்து உள்ளது. இது தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து உள்ளனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!