எம்.பி.யின் மனைவி, மகன், ஆடிட்டரை கடத்தி ரூ.50 கோடி கேட்டு மிரட்டல்!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் எம்.வி.வி.சத்தியநாராயணா. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மக்களவை எம்.பி.யாக உள்ளார்.

இவர் ஐதராபாத் சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு சில மர்ம நபர்கள் எம்.பி.யின் மகன் சரத் (35) என்பவரை கடத்தி சென்றனர்.

அதன் பின்னர் எம்.பி.யின் மனைவி ஜோதிக்கு. போன் செய்து உங்கள் மகனை கடத்தியுள்ளோம் உடனடியாக தங்கள் இருப்பிடத்துக்கு ரூ.50 கோடி பணத்துடன் வரும்படி செல்போனில் தகவல் அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து எம்.பி.யின் மனைவி ஜோதி (55) அங்கு சென்றார். அவரையும் கடத்தல்காரர்கள் பிடித்து வைத்துக்கொண்டனர்.

பின்னர் எம்.பி. சத்யநாராயணாவின் ஆடிட்டர் கன்னமனேனி வெங்கடேஸ்வராவுக்கு மர்மநபர்கள் போன் செய்தனர். எம்.பி.மனைவி, மகன் கடத்தப்பட்டதை கூறி தங்கள் இடத்திற்கு ரூ.50 கோடி கொண்டு வருமாறு மிரட்டினர்.

இதையடுத்து ஆடிட்டர் வெங்கடேஸ்வரராவ் தன்னிடம் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு கடத்தல்காரர்கள் கூறிய இடத்திற்கு சென்றார். அதற்குள் இந்த கடத்தல் குறித்து அறிந்த எம்.பி. சத்தியநாராயணா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் டி.ஜி.பி. ராஜேந்திரநாத் தலைமையில் 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையே கடத்தல்காரர்கள் ரூ.50 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு 3 பேரையும் விடுவித்தனர்.

இந்த கடத்தலுக்கு ரூ.50 கோடி பணம் கேட்டு பேரம் நடைபெற்றதை அறிந்த போலீசார் 3 பேரும் பாதுகாப்பாக உள்ளதை முதலில் உறுதி செய்து கொண்டனர். பின்னர் விசாரணை நடத்தினர்.

அதில் அவர்களை கடத்தியது பிரபல ரவுடி ஹேமந்த் என்று தெரியவந்தது. கடத்தலில் ஈடுபட்ட ஹேமந்த் உள்பட 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!