கடைக்கு சென்று பிஸ்கெட் , இனிப்புகளை சாப்பிட்ட யானை

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள அம்சாங் வன விலங்கு சரணாலயத்தில் ஏராளமான யானைகள் உள்ளது.

இந்த சரணாலயத்தில் இருந்து ஒரு யானை தனியாக வெளியேறி 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளது.

பின்னர் அந்த யானை சத்கான் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று பிஸ்கெட் பாக்கெட்டுகள் மற்றும் இனிப்புகளை எடுத்து சாப்பிட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

வீடியோக்களை பார்த்து ரசித்த இணைய பயனர்கள் ஜம்போ தனது இனிமையான பசியை தீர்த்துக் கொண்டது என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!