பிரபல நடிகை படிக்கட்டில் உருண்டு விழுந்து மரணம்… தாயார் செய்த நெகிழ்ச்சி செயல்!

தென் கொரியாவில் பிரபல நடிகை பார்க் சூ ரூ. இவர் படிக்கட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார். இவருக்கு வயது 29.

இவருடைய அகால மரணம் அந்நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சியும், சோகமும் அடைய வைத்துள்ளது.

இது குறித்து அவரது தாயார் தகவல் அளித்துள்ளார். அதில் “ ஜூன் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஷூட்டிங் முடித்து வீடு திரும்பினார்.

அப்போது பார்க் சூ ரூயின், வீட்டுப் பட்டிக்கட்டில் ஏறும்போது தவறி கீழே விழுந்தார்.

திடீரென கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நடிகை பார்க் சூ ரூயின் ஏற்கனவே மூளைச் சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதன்பிறகு இத்தகவல் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டது.

ஊடகத்திற்கு அவரது தாய் விடுத்த செய்திக்குறிப்பில் பார்க் சூ ரூயின், மகளின் மூளை எதற்கும் செயல்படாமல் உள்ளது.

அதனால் நாங்கள் அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்திட முடிவு செய்துவிட்டோம்.

மகள் உயிரோடு இல்லை என்றாலும், அவருடைய ஆரோக்கியமான உறுப்புகள் மற்றவர்களுக்கு பயன்படட்டும் என வேதனை பட தெரிவித்தார்.

ஜூன்12ம் தேதி திங்கட்கிழமை பார்க் சூ ரூயின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றன.-News & image Credit: dinamaalai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!