சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பாடகர் அதிரடி கைது!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாடகர் அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலம் குருகிராம் நகரில் வசித்துவரும் போஜ்புரி பாடகர் அபிஷேக் (வயது 21). பீகார் மாநிலத்தை சேர்ந்த இவரை இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் அதிக நபர்கள் பின் தொடர்கின்றனர். யூடியூபில் அவரை 27 ஆயிரம் பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அபிஷேக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாடகர் அபிஷேக்கை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜீவ் நகர் பகுதியில் அபிஷேக் வசித்துள்ள்ளார்.

அப்போது அதே பகுதியில் வசித்துவந்த 13 வயது சிறுமியுடன் நட்பாக பழகுவதாக கூறி நம்பவைத்து ஓட்டலுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியை அபிஷேக் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை தனது செல்போனில் படம்பிடித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் அபிஷேக்கிடமிருந்து விலகிய சிறுமி தனக்கு நடந்த சம்பவம் குறித்து வீட்டில் யாரிடமும் தெரிவிக்கவில்லை.

தற்போது சிறுமியின் அந்தரங்க புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் வெளியான நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாடகர் அபிஷேக்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!