வயதான தோற்றத்தை இயற்கையான முறையில் இப்படியும் தடுக்கலாம்…!


முன்பெல்லாம், ஒருவரின் முகத்தில் உள்ள சுருக்கங்களை வைத்தே அவர்களின் வாழ்நாளை கணித்து விடுவார்கள். ஏனெனில் வயதாவதன் முதல் அறிகுறியே முகச்சுருக்கம் மற்றும் சரும கோடுகள் தான். சருமத்தில் உள்ள கொலாஜன் குறைவதால் உங்கள் சருமம் மிருதுவான தன்மையை இழக்க நேரிடும். உடலிலும் இந்த கொலாஜன் அளவு குறைவது தீவிர சரும பிரச்சினைகளை உருவாக்கி விடும்.

எனவே சருமம் வயதாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் நல்லது. இவைகள் உங்களுக்கு பாதுகாப்பாகவும் இருக்கும். சரும சுருக்கங்கள், கோடுகள் மற்றும் சருமம் வயதாகுதல் போன்றவற்றை இயற்கையான முறையை பயன்படுத்தி எப்படி தடுப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.


01. வாழைப்பழம் மற்றும் ஒரேஞ்ச் ஜூஸ் மாஸ்க்
சாப்பிடுவதற்கு மட்டுமில்லாமல் சருமத்திற்கும் வாழைப்பழம் நல்ல ஈரப்பதத்தை தருகிறது. ஒரேஞ்ச் ஜூஸில் உள்ள விட்டமின் ஈ சரும பாதிப்பின் தீவிரத்தை குறைக்கிறது.

தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 1
ஒரேஞ்ச் ஜூஸ் – 1 மேசைக்கரண்டி
யோகட் – 1 மேசைக்கரண்டி

செய்முறை
வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ள வேண்டும். அதனுடன் ஒரேஞ்ச் ஜூஸ் மற்றும் யோகட் போன்றவற்றை கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின்னர் கழுவி விட வேண்டும்.


02. வெள்ளரிக்காய் மற்றும் யோகட் மாஸ்க்
வெள்ளரிக்காயில் பி1, பி2, பி3, பி5, பி6, பொட்டாசியம், போலிக் அமிலம், மக்னீசியம், இரும்புச் சத்து, கல்சியம், விட்டமின் சி, பொஸ்பரஸ் மற்றும் ஸிங்க் என்பன உள்ளன. எனவே இது உங்கள் சருமத்தை பொலிவாகவும் ஈரப்பதமுள்ளதாகவும் மாற்றுகிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் வெடிப்புகளை சரி செய்கிறது.


தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் – பாதி
யோகட் – சிறிதளவு
புதினா இலைகள் – 1 கைப்பிடியளவு

செய்முறை
வெள்ளரிக்காய் மற்றும் புதினா இலைகளை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் யோகட் கலந்து அதை குளிருட்டியில் 20 நிமிடங்கள் வைக்க வேண்டும். பிறகு இந்த குளிர்ந்த கலவையை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.
மேற்குறிப்பிட்ட முறைகளை தொடர்ந்து பின்பற்றி வந்தால் உங்கள் சருமத்தை எதுவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் இயற்கை முறையிலேயே பாதுகாக்கலாம்!- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!