கேன்ஸ் படவிழாவில் உருக்கமாக பேசிய சன்னிலியோன்!

ஆபாச படவுலகில் இருந்து இந்திய சினிமாவுக்கு மாறும்போது அவமானங்களையும், கொலை மிரட்டல்களையும் எதிர்கொண்டேன் என கேன்ஸ் படவிழாவில் சன்னிலியோன் கூறி உள்ளார்.

கேன்ஸ் அனுராக் காஷ்யப் இயக்கிய கென்னடி திரைப்படத்தின் பிரீமியர் காட்சிக்கா கேன்ஸ் பட விழாவில் சன்னி லியோன், ராகுல் பட் மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

படத்தின் பிரீமியருக்கு, சன்னி ஒரு தோள்பட்டை வெளிர் இளஞ்சிவப்பு நிற கவுனை அணிந்திருந்தார்.

அனுராக் காஷ்யப் இயக்கிய கென்னடி திரைப்படத்தின் பிரீமியர் காட்சிக்காக கேன்ஸில் இருக்கும் சன்னி லியோன், “இன்று வரையிலான எனது கேரியரில் இது மிகவும் அற்புதமான தருணங்களில் ஒன்றாகும்” என்று கூறி உள்ளார்.

மேலும் ஆபாச படத்துறையில் இருந்து இந்திய சினிமாவுக்கு மாறும் போது தான் அவமானங்களையும், பல கொலை மிரட்டல்களையும் எதிர்கொண்டதாக கூறினார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!