பிரபல நடிகையின் கழுத்தில் இருக்கும் முதலை நெக்லஸின் விலை இத்தனை கோடியா..?

கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு நடிகை ஊர்வசி ரவ்தெலா அணிந்து சென்ற முதலை நெக்லஸின் விலை ரூ. 276 கோடி என அவரின் பி.ஆர். குழு சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது.


பிரான்ஸ் நாட்டில் இருக்கும் கேன்ஸ் நகரில் திரைப்பட விழா நடந்து வருகிறது. அந்த விழாவில் பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவ்தெலா கலந்து கொண்டு அழகு அழகான உடைகளில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.


அவர் ரோல்ஸ் கலர் ஸ்ட்ராலெஸ் கவுன் அணிந்து நடந்து வந்தபோது அனைவரின் கவனமும் ஊர்வசியின் கழுத்தில் இருந்த நெக்லஸ் மீது தான் சென்றது. முதலை வடிவில் இருந்த அந்த நெகல்ஸை தான் அனைவரும் பார்த்தார்கள்.

ஊர்வசி வெளியிட்ட புகைப்படங்களை ரசிகர்கள் ஜூம் செய்து முதலை நெக்லஸை பார்த்தார்கள். அந்த முதலை நெக்லஸை பாராட்டியவர்கள் பாராட்டினார்கள். அதே சமயம் நெக்லஸை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ் போட்டும் கலாய்த்தார்கள்.

இந்நிலையில் தான் நகை நிபுணரான அருந்ததி ஷேத் என்பவர் ஊர்வசி ரவ்தெலா அணிந்திருந்த நெக்லஸ் போலி என இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் தெரிவித்தார். முதலை நெக்லஸ் அணிந்து ஊர்வசி ரவ்தெலா நடந்து வந்த வீடியோவை இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டு அருந்ததி கூறியதாவது,

இந்த லுக்கை பார்த்து நான் குழம்பியிருக்கிறேன். அவர் கார்டியரின் ஒரிஜினல் மரியா ஃபெலிக்ஸ் முதலை நெக்லஸா அணிந்திருக்கிறார்?!. காதணிகளை செய்தவர் யார்?. விளக்கம் தேவை. இல்லை என்றால் தூக்கம் வராது என்றார்.

அருந்ததி மேலும் கூறியதாவது,

பிரான்ஸில் இருக்கும் கேன்ஸுக்கு சென்றிருக்கிறீர்கள். அது தான் கார்டியரின் சொந்த நாடு. வரலாற்று சிறப்பு மிக்க நகையின் போலி பீஸை அணிவது. நம் நாட்டின் சார்பில் கலந்து கொண்டு, நிஜ கார்டியர் நெக்லஸை அணிவது போன்று நடிப்பது.

வெட்கமாக இருக்கிறது ஊர்வசி ரவ்தெலா. ஹோம்வொர்க் செய்யவில்லை என்பது தெரிகிறது. நம் நாட்டில் ஸ்பெஷலான பொக்கிஷங்கள், நகைகள் இருக்கிறது. அதை அவர் அணிந்திருக்கலாம் என்றார்.

அருந்ததி குற்றம் சாட்டிய பிறகு ஊர்வசி ரவ்தெலாவின் இன்ஸ்டா ஸ்டோரீஸில் அவரின் பி.ஆர். குழு விளக்கம் அளித்திருக்கிறது.

பி.ஆர். குழு கூறியிருப்பதாவது,

ஊர்வசி ரவ்தெலா அணிந்திருந்த ஒரிஜினல் முதலை நெக்லஸின் விலை ரூ. 200 கோடியில் இருந்து ரூ. 276 கோடியாக உயர்ந்துவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருந்ததி தெரிவித்தது போன்று ஊர்வசி ரவ்தெலா போலி நெக்லஸை அணியவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஊர்வசி கழுத்தில் இருந்த முதலை நெக்லஸின் விலை ரூ. 276 கோடியா, அது இருந்தால் வாழ்க்கை பயங்கரமாக செட்டில் ஆகிவிடுமே என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

சிங் சாப் தி கிரேட் என்கிற இந்தி படம் மூலம் நடிகையான ஊர்வசி ரவ்தெலா கன்னடம் மற்றும் தெலுங்கு படங்ளிலும் நடித்து வருகிறார்.

லெஜண்ட் சரவணன் அருள் நடிப்பில் வெளியான தி லெஜண்ட் படம் மூலம் கோலிவுட் வந்தார் ஊர்வசி ரவ்தெலா. முதல் தமிழ் படத்திலேயே நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார் ஊர்வசி. அவர் தற்போது ஒரு இந்த படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!