அமேசான் காட்டிற்குள் விமான விபத்து – 17 நாட்களுக்கு பிறகு 4 குழந்தைகள் உயிருடன் மீட்பு!

உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசான் வனப்பகுதியில் இருந்து தம்பதி தனது 11 மாத கைக்குழந்தை உள்பட 4 குழந்தைகளுடன் ஹெலிகாப்டரில் சன் ஜொஷி டி கவ்ரி நகருக்கு கடந்த மாதம் 1ம் தேதி சென்றுள்ளனர்.

அமேசான் அடவனப்பகுதியில் சென்றபோது ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி, தம்பதி என 3 பேர் உயிரிழந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக 11 மாத கைக்குழந்தை உள்பட 4 பேர் இந்த விபத்தில் உயிர் பிழைத்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை கண்டுபிடித்தனர்.

அங்கு விமானி, தம்பதியர் என 3 பேரின் உடல்களை கைப்பற்றினர். இதையடுத்து, குழந்தைகளை தேடும் பணியில் 100 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.

இந்நிலையில், 17 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின் பச்சிளம் குழந்தை உள்பட 4 குழந்தைகளை உயிருடன் மீட்கப்பட்டனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!