கருவளையமா… இதை மட்டும் செய்யுங்க உடனே நீங்கிவிடும்..!

நம்மில் பலருக்கு அழகு பற்றிய கவலை அதிகமாவே இருக்கிறது. அதிலும் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் இன்று பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானதாக இருக்கிறது.

பருவ வயதை அடையும் பெண்களுக்கும் முன்கூட்டியே இந்த பிரச்சனை அதிகரித்துவிடும். எனவே இதனை ஆரம்பத்திலே போக்குவது நல்லதாகும்.

அந்தவகையில் தற்போது கண்களுக்கு கீழ் உள்ள கருவளையத்தை எப்படி எளியமுறையில் போக்கலாம் என்பதை பார்ப்போம்.

கற்றாழை ஜெல்லை விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவினால் போதும் கருவளையம் உடனடியாக நீங்கும்

விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து குளித்து வர கருவளையம் சரி ஆகும்.

விளக்கெண்ணெய் மற்றும் பாலை நன்றாக கலக்கி கண்களில் உள்ள கருவளையங்களில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் போதும் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும்.

விளக்கெண்ணெய் மற்றும் உருளைக்கிழங்கின் சாறு சேர்த்து தடவினால் கருவளையம் வெகு விரைவில் குணமாகும்.

இரவு தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து தடவ வேண்டும். காலையில் மீண்டும் குளித்து வர கருவளையம் மறையும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!