இது தான் என் கடைசி நாள்… மன்னித்துவிடுங்கள்… நடன இயக்குனர் விபரீத முடிவு!

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த பிரபல நடன இயக்குனர் சேத்தன்யா. தெலுங்கு திரைத்துறையில் பல திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ள சேத்தன்யா டிவி நடன நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தார்.

இதனிடையே, சேத்தன்யா பலரிடம் அதிக அளவு பணம் கடன் பெற்றுள்ளார். அந்த கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடன் சுமையால் சேத்தன்யா நேற்று முன் தினம் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்வதற்கு முன் தனது செல்போனில் வீடியோ ஒன்றை சேத்தன்யா எடுத்துள்ளார்.

தற்கொலை செய்வதற்கு முன் சேத்தன்யா எடுத்த வீடியோவில் கூறுகையில், நான் எந்த பிரச்சினையிலும் சிக்காதவாறு என் அம்மாவும், அப்பாவும், சகோதரியும் என்னை நன்றாக பார்த்துக்கொண்டனர்.

எனது நண்பர்களிடம் நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன். நான் நிறையபேருக்கு தொல்லைகொடுத்துவிட்டேன். அனைவரிடமும் நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.

பண விவகாரத்தில் எனது நற்குணத்தை நான் இழந்துவிட்டேன். கடன் வாங்குவது பெரிதல்ல ஆனால், அந்த கடனை திருப்பி செலுத்தும் திறன் இருக்க வேண்டும். ஆனால், என்னால் திருப்பி செலுத்தமுடியவில்லை.

நான் நெல்லூரில் இருக்கிறேன். இது தான் என் கடைசி நாள். கடன் தொடர்பாக எழுந்த பிரச்சினைகளை என்னால் சமாளிக்க முடியவில்லை’ என வீடியோவில் தெரிவித்துள்ளார்.

வீடியோவை எடுத்துவிட்டு சேத்தன்யா தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!