தூக்கில் பிணமாக தொங்கிய நடிகை – இந்தி நடிகர் சூரத் பஞ்சோலி விடுதலை!

இந்தி நடிகை ஜியாகான் கடந்த 2013-ம் ஆண்டு மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

ஜியாகான் கொலை செய்யப்பட்டதாக அவரது தாய் ராபியா மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

ஜியாகான் தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலரும் நடிகருமான சூரத் பஞ்சோலி மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இவ்வழக்கு மும்பையில் உள்ள சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் ஜியாகான் மரண வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதில் சூரத் பஞ்சோலியை விடுதலை செய்வதாக கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

போதுமான ஆதாரம் இல்லாததால் சூரத் பஞ்சோலி விடுவிக்கப்படுவதாகவும், அவர் குற்றம் செய்தார் என்பது நிரூபிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் அறிவித்தது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!