ஆந்திராவை சேர்ந்த சந்தரக கோவிந்த் (வயது 31) விசாகபட்டினத்தில் கடற்படை கமாண்டோராக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் மேற்குவங்காளத்தில் ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து கீழே குதித்து பயிற்சி மேற்கொண்டிருக்கும் போது நடுவானில் பாராசூட் திறக்காததால் கீழே விழுந்து பலத்த காயங்களுடன் உயிரிழந்தார்.
பாங்குரா மாவட்டத்தில் உள்ள பார்ஜோராவில் உள்ள ஒரு தொழிற்சாலையின் வாயிலுக்கு வெளியே கோவிந்த் கண்டுபிடிக்கப்பட்டார்.
பாராசூட் அவரது தோள்களில் இணைக்கப்பட்டதை தெரிந்து கொண்ட போலீசார் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த அதிகாரி சந்தரகா கோவிந்துக்கு இந்திய கடற்படையின் உயர் அதிகாரிகள்மற்றும் அனைத்து பணியாளர்களும் அஞ்சலி செலுத்தினர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
அவரது உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!