காதலரை மணந்த சகோதரி… சந்தோஷத்தில் கண் கலங்கிய சோபிதா துலிபாலா!

பொன்னியின் செல்வன் படம் புகழ் சோபிதா துலிபாலாவின் சகோதரி சமந்தாவுக்கும், அவரின் காதலருக்கும் திருமணம் நடந்திருக்கிறது.

நடிகை சோபிதா துலிபாலா தன் சகோதரி சமந்தாவின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை சோபிதா துலிபாலாவின் சகோதரி சமந்தாவும், டெல்லியை சேர்ந்த டாக்டர் சாஹில் குப்தாவும் காதலித்து வந்தார்கள். இருவரும் காதலை வீட்டில் சொல்லி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.

அவர்களின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு எமோஷனலாக போஸ்ட் போட்டிருக்கிறார் சோபிதா.

சமந்தா, சாஹில் திருமணம் பற்றி சோபிதா கூறியிருப்பதாவது, இது வடக்கு தெற்கை சந்தித்த திருமணம். சாஹில் டெல்லியை சேர்ந்தவர். என் சகோதரி ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர்.

ஒருவருக்கொருவர் அன்பாக இல்லாத இந்த உலகில் அதுவும் குறிப்பாக பெண்கள்…அப்படி இருக்கும்போது சகோதரியின் பாசத்தை உணர கொடுத்து வைத்திருக்கிறேன். அவர் தான் விரும்பிய நபரை மணப்பதை பார்க்கவும் தான் என்றார்.

சமந்தா, சாஹில் திருமணத்தை பார்த்து எமோஷனலாகிவிட்டேன். திருமண பந்தத்தின் மீதான என் நம்பிக்கையை அது அதிகரித்துள்ளது.

இந்த திருமண விழா இரவு முழுக்க நடந்தது. 12 மணிநேரம் நடந்தது. அப்படி இருந்தும் போதிய பூஜைகள் செய்யவில்லை என என் அம்மா அதிருப்தியில் இருக்கிறார்.

மணமகனும், மணமகளும் ஹோம குண்டத்தில் குதித்துவிடலாமா என யோசித்தார்கள் என்று தெரிவித்துள்ளார் சோபிதா துலிபாலா.

திருமணம் மட்டும் அல்ல வரவேற்பு, ஹல்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் சோபிதா.

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சமந்தா, சாஹிலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அடுத்து உங்களின் திருமணம் எப்பொழுது சோபிதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யாவும், சோபிதாவும் காதலிப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் ஜோடியாக லண்டனில் இருக்கும் உணவகத்திற்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் கடந்த வாரம் வைரலானது.

நாக சைதன்யாவும், சோபிதாவும் காதலை உறுதி செய்யவில்லை. ஆனால் அவர்கள் காதலர்கள் தான் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.

மணிரத்னம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தில் வானதியாக நடித்திருக்கிறார் சோபிதா துலிபாலா. அந்த படம் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

முதல் பாகத்தில் வானதிக்கு பெரிதாக வேலை இல்லை. அதனால் இரண்டாம் பாகத்தில் வானதியை கூடுதல் காட்சிகளில் பார்க்கலாம் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.

பொன்னியின் செல்வரான ஜெயம் ரவிக்கு தான் சோபிதா ஜோடியாக நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் படம் ரூ. 500 கோடி வசூல் செய்தது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகம் ரூ. 1000 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.-News & image Credit: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!