தோள் மீது கை போட்டு செல்பி எடுக்க முயன்ற மாணவி… கோபப்பட்ட நயன்தாரா!

தஞ்சை மாவட்டம், வழுத்தூரில் ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் நடிகை நயன்தாராவின் கணவரும், திரைப்பட இயக்குனருமான விக்னேஷ் சிவனின் குலதெய்வம்.

திருமணத்திற்கு முன் இருவரும் இந்த கோவிலுக்கு வந்தனர். பின்னர் இருவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் பிறந்த நிலையில் நேற்று மீண்டும் இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

கோவிலை இருவரும் சுற்றி பார்த்து கொண்டிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஏராளமான ரசிகர், ரசிகைகள், மாணவிகள் அங்கு திரண்டனர். நயன்தாராவை பார்க்க முண்டியடித்தனர்.

அந்த நேரத்தில் நயன்தாராவை பின்தொடர்ந்து சென்ற கல்லூரி மாணவிகளில் சிலர் அவர் தோள் மீது கை போட்டு செல்பி எடுக்க முயன்றனர். இதனால் அந்த மாணவிகள் மீது கோபப்பட்டு முறைத்து கொண்டு திரும்பி சென்றார்.

தொடர்ந்து அவர் கோவில் முழுவதும் சுற்றி பார்த்தார். பின்னர் நயன்தாரா, விக்னேஷ்சிவன் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி வழியாக சென்னைக்கு சென்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!