வில்லன் நடிகரை விவாகரத்து செய்து பிரிந்த மனைவி!

மலையாள திரையுலகில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் விநாயகன். விநாயகன் 1995 ஆம் ஆண்டு மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்த ‘மாந்திரீகம்’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அதன்பிறகு இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலும் அறிமுகமான விநாயகன், மலையாளம் தவிர, தமிழில் அதிக படங்களில் நடித்துள்ளார்.


குறிப்பாக விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திமிரு படம் மூலம் தமிழில் வில்லனாக எண்ட்ரி கொடுத்த விநாயகன், அப்படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் அடியாளாக நடித்திருப்பார். அப்படத்திற்கு பின்னர் தனுஷின் மரியான் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் விநாயகன்.

இதையடுத்து 11 ஆண்டுகளாக தமிழ் திரையுலகம் பக்கம் தலைகாட்டாமல் இருந்து வந்த இவர், தற்போது ஜெயிலர் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். ரஜினிகாந்த் நாயகனாக நடித்து வரும் இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நடிகர் விநாயகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள விநாயகனின் தமிழ்ப் படமான ‘துருவ நட்சத்திரம்’ ரிலீசுக்கு தயாராகி வருகிறது, மேலும் சியான் விக்ரம் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் இந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில், நடிகர் விநாயகன் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து மீடு சர்ச்சையில் சிக்கி வந்ததால் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தனது மனைவி பபிதாவை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதாக தனது சமூக வலைதள பக்கம் மூலம் அறிவித்துள்ளார் விநாயகன். நடிகர் விநாயகன் மீது கடந்தாண்டு மாடல் அழகி ஒருவர் மீடூ புகார் தெரிவித்து இருந்தார்.

அப்போது இதுகுறித்து கருத்து தெரிவித்த விநாயகன், இதுவரை தான் 10 பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டதாகவும், அந்த பெண்களின் சம்மதத்துடன் தான் அவ்வாறு செய்ததாகவும் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்த விவகாரம் தான் அவரது குடும்பத்திலும் பூகம்பத்தை ஏற்படுத்தி தற்போது விவாகரத்து செய்யும் நிலைக்கு தள்ளி உள்ளது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!