மார்பகத்தை வீடியோ காலில் காட்ட சொன்ன நபர் – கதறி அழுத நடிகை சிந்து.!

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ‘அங்காடித் தெரு’ நடிகை சிந்து பேட்டி ஒன்றில் தனக்கு நடக்கும் அவலங்கள் குறித்து கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ‘அங்காடித் தெரு’ படத்தில் நடித்து பிரபலமானார் சிந்து. இதேபோல் நாடோடிகள், தெனாவெட்டு, கருப்பசாமி குத்தகைதாரர், நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அண்மையில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் உதவிக்கேட்டு யூடிப் சேனல்களில் பேசியிருந்தார்.

நடிகை சிந்து திரைப்படங்களில் மட்டுமில்லாமல் சீரியல்களிலும் நடித்துள்ளார். குணச்சித்திர வேடங்கள் மட்டுமில்லாமல் வில்லி ரோல்களிலும் நடித்துள்ளார். சிந்து தற்போது கேன்சர் நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். இவர் தனக்கு உதவி செய்யுமாறு யூடிப் சேனல்களில் பேட்டி அளித்து வருகிறார்.

அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்த போது எனக்கு மார்பகத்தில் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அந்த சமயத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க முடியாததால், நாளுக்கு நாள் கட்டி பெரிதாகிவிட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டேன்.

ஆப்ரேஷன் நடந்து மூன்றாண்டுகள் கழித்தும் புண் ஆறவே இல்லை. என் மருமகனும் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். என் மகளை தற்போது அந்த கோலத்தில் பார்க்கவே முடியவில்லை. அதிலிருந்து படுக்கையில் தான் இருக்கிறேன். என் மகள் படித்திருக்கிறாள். அவளுக்கு முதலமைச்சர் ஏதாவது வேலை கொடுத்தாள் நன்றாக இருக்கும்.

என்னுடைய நிலைமை தெரிந்து கோவை சரளா, மனோபாலா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் உதவி செய்தனர். இந்நிலையில் உதவிக்கேட்டு நான் பல வீடியோக்கள் வெளியிட்டிருந்தேன். அந்த வீடியோவை பார்த்த ஒருவர் என்னிடம் நள்ளிரவு 12 மணிக்கு போன் செய்து நலம் விசாரித்தார். இந்த நேரத்தில் கூட அக்கறையாக விசாரிக்கிறாரே என நினைத்தேன்.

ஆனால் சிறிது நேரத்தில் நலம் விசாரிப்பதை போல் விசாரித்துவிட்டு வீடியோ காலில் வர சொன்னார். நான் எதற்கு என்று கேட்டப்போது, ஒரு பக்கம் மார்ப்பில் தானே கேன்சர் கட்டி இருக்கிறது. இன்னொரு பக்க மார்பகத்தை காட்டு ஐந்து லட்சம் தருகிறேன் என்று மிகவும் கொச்சையாக பேசினார் என கண்ணீர் மல்க பேசியுள்ளார் நடிகை சிந்து.-News & image Credit: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!