மலேசியாவில் ‘ரோஜா’ சீரியல் நாயகிக்கு திடீரென நடந்த ரகசிய திருமணம்!

ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா நல்காரியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாவதை தொடர்ந்து பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிப்பரப்பான பிரபலமான சீரியல் ‘ரோஜா’. இந்த சீரியலின் டைட்டில் ரோலான ரோஜா கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரியங்கா நல்காரி.

ப்ரைம் டைமில் ஒளிப்பரப்பாகி வந்த இந்த சீரியல் சின்னத்திரையில் மிகப்பிரபலம். இந்நிலையில் இந்த சீரியலின் நாயகி பிரியங்காவிற்கு திடீர் திருமணம் நடந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் இன்பதிர்ச்சியை அளித்து வருகிறது.

சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘ரோஜா’ சீரியலில் பிரியாங்கா நல்காரியும், சிபு சூரியனும் இணைந்து நடித்திருந்தனர். இந்த ஜோடி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்த சீரியலுக்கு குடும்ப தலைவிகளிடையே மட்டுமில்லாமல் இளைஞர்கள் மத்தியிலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தது. கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து ஒளிப்பரப்பாகி வந்த இந்த சீரியல் அண்மையில் நிறைவடைந்தது.

‘ரோஜா’ சீரியலில் கிடைத்த வாரவேற்பை தொடர்ந்து தற்போது ஜி தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் ‘சீதா ராமன்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார் பிரியங்கா நல்காரி. சோஷியல் மீடியாவிலும் இவர் மிகப்பிரபலம். எக்கச்சக்கமான ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் திடீரென தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி அளித்துள்ளார் பிரியங்கா நல்காரி. ராகுல் வர்மா என்ற பிசினஸ் மேனை திருமணம் செய்துள்ளார் பிரியங்கா. மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் வைத்து இவர்களின் திருமணம் எளிமையாக நடந்து முடிந்துள்ளது.

பிரியங்கா நல்காரி திடீரென ரகசியமாக தனது திருமணத்தை முடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

இதையெல்லாம் தாண்டி பிரியங்கா நல்காரியின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயுள்ளார் பிரியங்கா நல்காரி.-News & image Credit:samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!