சூறையாடிய பிரெட்டி சூறாவளி – மலாவியில் 300 பேர் பலி!

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மலாவி. அந்நாட்டில் பிரெட்டி என்ற பருவகால சூறாவளி புயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையும், பலத்த காற்றும் வீச கூடும் என எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

தெற்கு மலாவியில் பல்வேறு மாவட்டங்களின் பெரும் பகுதி சூறாவளி தாக்கத்தினால் பாதிக்கப்படும். இதனால், பெரு வெள்ளம் ஏற்படும். பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு காற்றின் வேகம் இருக்கும் என அதுபற்றிய அமைச்சக அறிக்கை எச்சரித்து இருந்தது.

இதற்கேற்ப சூறாவளி புயலால் பரவலாக பாதிப்பு ஏற்பட்டது என இயற்கை வளங்கள் மற்றும் பருவகால மாற்றங்களுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தெற்கு மலாவியில் நிலைமை மோசமடைந்துள்ளது என பேரிடர் மேலாண் விவகார துறை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், நிலைமை மோசமடைந்து எண்ணற்ற பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சாலைகள் மற்றும் பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. தெளிவற்ற வானிலையும் காணப்படுகிறது. இதேபோல், பல இடங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது என அந்தத் துறைக்கான ஆணையாளர் சார்லஸ் கலேம்பா கூறியுள்ளார். இந்த சூறாவளி தாக்கத்தினால் இதுவரை 326 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது. தெளிவற்ற வானிலையால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!