தனி ஒருவனாக மலையை குடைந்து சாலை அமைத்த நபர்..!

உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டம் கிவார் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் கோசுவாமி. கூலி தொழிலாளி. இவர் தனி ஒருவனாக மலையை குடைந்து தனது கிராமத்தை முக்கிய சாலையுடன் இணைக்க சாலை அமைத்துள்ளார்.

500 மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலையை சுத்தியல் மற்றும் உளியின் உதவியுடன் 9 மாதங்களில் உருவாக்கியுள்ளார். இந்த சாலை பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது. இதில் 4 சக்கர வாகனங்கள் பயணிக்க முடியும்.

இதன்மூலம் அந்த கிராமத்தை சேர்ந்த 300 பேர் பயனடைவார்கள். ஆனால் அந்த சாலையை அமைக்க அவருக்கு யாருமே உதவவில்லை. கூலி வேலைக்கு சென்று வரும் பிரகாஷ் தினமும் ரூ.600 சம்பாதிக்கிறார்.

வேலைக்கு செல்லும் முன்பு அதிகாலை 5 மணி முதல் 9 மணி வரை சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!