வலுக்கட்டாயமாக பெண்ணை முத்தமிட்டு தப்பிய வாலிபர்.. அதிர்ச்சி சம்பவம்..!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒரு பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக முத்தமிட்டு தப்பி ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள சதார் மருத்துவமனையில் அந்த பெண் சுகாதாரப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த 10 ஆம் தேதி மருத்துவமனை வளாகத்துக்குள் நின்றுகொண்டு செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது மருத்துவமனை சுவர் ஏறி குதித்து வந்த மர்ம நபர் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணின் உதட்டில் முத்தமிட்டு பின்னர் அங்கிருந்து தப்பி சென்றார்.

நடந்ததை குறித்து அதிர்ச்சியில் ஆழ்ந்த அந்த பெண் உடனே மருத்துவமனை ஊழியர்களை அழைத்து விஷயத்தை கூறியுள்ளார். ஆனால், அதற்குள் அந்த மர்ம நபர் சுவர் ஏறி குதித்து வெளியே தப்பியோடிவிட்டார். இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண் ஜமுய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், மர்ம நபர் அந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தமிட்டு தப்பியோடுவது பதிவாகி இருந்தது. அதனை தொடர்ந்து போலீசார் முதல் தகவல் அறிக்கை தயார் செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் இச்சம்பவம் குறித்து ஊடகத்திற்கு கொடுத்த தகவலில், அவன் ஏன் மருத்துவமனை வளாகத்திற்குள் வந்தான் என்று தெரியவில்லை. இதற்கு முன்பு அவனை நான் பார்த்ததே இல்லை.

நான் அவனுக்கு என்ன செய்தேன்? மருத்துவமனையின் எல்லை சுவர் மிக குறுகியது அதற்கு மேல் முள்வேலி அமைத்து மருத்துவமனைக்கு வரும் பெண்களை பாதுகாக்க, அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்” என்றார்.

இதுகுறித்து போலீசார், சிசிடிவி காட்சியை கொண்டு குற்றவாளியை தேடி வருகிறோம், விசாரணை நடந்து வருகிறது.. குற்றம் சாட்டப்பட்டவர் விரைவில் காவல்துறையின் காவலில் இருப்பார். இதுபோன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வருவது இதுவே முதல் முறை என்று தெரிவித்தனர்.

பட்டப்பகலில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த பெண்ணை சுவர் ஏறி குதித்து சென்று முத்தமிட்டு தப்பிய நபரின் செயலால் அப்பகுதி பெண்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பரவி வரும்நிலையில் அதை பார்ப்பவர்களை மிகுந்த பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!