என் மனைவிக்கு பாசிலுடன் தகாத உறவு – தாடி பாலாஜி பரபரப்பு குற்றச்சாட்டு..!


பிரபல கொமடி நடிகரான தாடி பாலாஜி மீது அவரது மனைவி நித்யா பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது நாம் அனைவரும் அறிந்ததே.

சாதிப் பெயரை சொல்லி திட்டுவதாகவும், தன்னையும் மகளையும் கொடுமைப்படுத்துவதாகவும் பொலிஸ் நிலையத்திலும் புகார் அளித்தார்.

தாடி பாலாஜி மிரட்டிய வீடியோவையும் வெளியிட்டார், இந்நிலையில் தாடி பாலாஜி அளித்துள்ள பேட்டியில், பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலம் என் மனைவிக்கு தவறான பழக்கம் ஏற்பட்டது, அதை நான் கண்டித்தேன்.

சுதந்திரமாக இருக்க விரும்பினார், ஆனால் எதற்கும் ஒரு வரையறை உள்ளது, நான் குடிப்பேனே தவிர எந்தவொரு பெண்ணுடனும் தவறாக பழகியதில்லை.

அவரது போனை ஏன் ரகசியமாக வைக்க வேண்டும்? இதுதான் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருந்தது.

என் மனைவிக்கும், பாசில் என்பவருக்கும் தொடர்பு இருந்தது, அன்பாக பேசி பெண்களை ஏமாற்றுவதே அவருடைய வேலை.

பாசிலுடன் என் மனைவி பெங்களூர் வரை சென்றுள்ளார், என் மகளும் அந்த புகைப்படத்தில் இருந்தார்.

பேஸ்புக் நண்பர்களின் தூண்டுதலின் பேரிலேயே, சாதியை குறித்து திட்டியதாக வழக்கு பதிந்தார்.

பாலாஜியை பழிவாங்கணும் என்ற நோக்கத்தில் தான் இதெல்லாம் நடந்தது, என் மனைவி, மகளுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், நான் கொல்லப்போகிறேன் எனக்கூறி வெளியிட்ட வீடியோ உண்மையில்லை, அன்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மெழுகுவர்த்தி எரிந்து துணியில் பிடித்தது, நான் கதவையும் பூட்டவில்லை என தெரிவித்துள்ளார்.-Source: lankasee

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!