காதலிப்பதாக கூறி ஏமாத்தியிருக்காங்க… கதறி அழுத டிக்டாக் இலக்கியா!

காதலிப்பதாக கூறி ஏமாத்தியிருக்கிறார்கள் என கதறி அழுதுள்ளார் நடிகை இலக்கியா.

டிக்டாக் இலக்கியா

டிக்டாக் ஆப்பின் மூலம் பெரும் பிரபலமானவர் இலக்கியா. பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். சில படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த இலக்கியா, நீ சுடத்தான் வந்தீயா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். பல பேர் சினிமா வாய்ப்பு கொடுப்பதாக கூறி ஏமாற்றியுள்ளதாக பல முறை நேர்க்காணல்களில் கூறியுள்ளார் இலக்கியா.

அம்மா இல்ல

இந்நிலையில் நடிகை இலக்கியா, பிரபல யூட்யூப் சேனலில் நடிகை ஷகீலா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார் நடிகை இலக்கியா.

தனது அப்பா அம்மாவுக்கு தாங்கள் 3 மகள்கள் என்றும் தான் மூன்றாவது படிக்கும் போது தனது அம்மா இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் தான் 8 ஆம் வகுப்பு படிக்கும் போது தனது அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.


பஞ்சு மில்லில் வேலை

தனது அம்மா இருந்திருந்தால் தனது வாழ்க்கை, படிப்பு, திருமணம் என்று போயிருக்கும் என்றும் அம்மா இல்லாததால் தான் தன்னுடைய வாழ்க்கை இப்படி மாறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

படிப்பதற்கு கூட அப்பா எந்த உதவியும் செய்யவில்லை, வீட்டில் பிரச்சனைகள் இருந்ததால் கோயம்புத்தூரில் பஞ்சு மில்லுக்கு வேலைக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார் நடிகை டிக்டாக் இலக்கியா.

யாருமே இல்ல

அதிக சம்பளம் கிடைக்கும் என்று சென்னைக்கு வந்ததாகவும், அப்போது தான் டப்ஸ்மேஷில் வீடியோ வெளியிட முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கிளாமர் வீடியோ போட்டதால் லைக்ஸ் குவிந்தது என்றும் தனக்கு என்று யாரும் இல்லை என்பதால் எப்படி வேண்டுமானாலும் வீடியோ பண்ணலாம் என கிளாமர் வீடியோக்களை பண்ணியதாகவும் தெரிவித்தார்.

தன்னுடைய கிளாமர் வீடியோக்களால் டிக்டாக் தன்னை மூன்று முறை தடை செய்ததாகவும் வேறுவேறு ஐடிகளின் மூலம் மீண்டும் வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

துரோகம் செய்திருக்காங்க

வீட்டில் அப்பாவை தவிர வேறு யாரிடமும் பேசுவதில்லை என்றும் சில நேரங்களில் தனிமையில் இருப்பதை நினைத்து தற்கொலை செய்து கொள்ள கூட தோன்றியிருக்கிறது என்றும் கூட இருந்தவர்களே பல துரோகங்களை செய்திருக்கிறார்கள்.

நிறைய ஏமாற்றப்பட்டிருக்கிறேன் என கண்ணீர்விட்டு அழுதார் இலக்கியா. பண்டிகை நாட்களில் தனியாக இருப்பதை நினைத்து அழுதுள்ளேன் என்றும் வேதனைப்பட்டார் இலக்கிய. இதையடுத்து உனக்காக நான் இருக்கிறேன், என் போன் நம்பரை வாங்கிக்கொள் என அவருக்கு ஆறுதல் கூறினார் நடிகை ஷகீலா.

பழகியவர்கள் கூட பேசுவதில்லை

மேலும் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சனையால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், என்ன பிரச்சனை என்றே தெரியாமல், தன்னிடமும் கேட்காமல் பலர் பேசுவதையே நிறுத்திவிட்டார்கள் என்றும் வேதனைப்பட்டுள்ளார் இலக்கியா.

மேலும் கடந்த 4 ஆண்டுகளில் என் பெயரை வைத்து நடந்த சம்பவங்களை மறக்க முடியவில்லை என்றும் அந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வர முடியவில்லை என்றும் கலங்கியுள்ளார்.


வாய்ப்பு தர்றேன் சொல்லி…

படிக்கும் போது காதலித்தேன், ஆனால் இப்போது யாரையும் காதலிக்கவில்லை என்றும் வாய்ப்பு தருகிறேன் என்று ஏமாத்தியிருக்கிறார்கள். ஆகையால் இப்போது
யாரிடமும் வாய்ப்பு கேட்டு செல்வதில்லை என்றும் வேதனையுடன் கூறியுள்ளார் டிக்டாக் இலக்கியா.

டிக்டாக் இலக்கியாவின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், வீடியோக்களில் உடலை காண்பித்து கவர்ச்சி ஆட்டம் போடும் இலக்கியாவுக்குள் இவ்வளவு வலியா என கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!