மேக்கப் போடுபவர்களுக்கான அருமையான டிப்ஸ்!

மேக்கப் செய்வதற்கு முன், முகத்தை நன்றாக கழுவவேண்டும். முகத்தில் பரு, சிறுசிறு துளைகள் இருந்தால் அதை ‘பிரைமர்’ எனப்படும் பூசு பொருள் கொண்டு சரிசெய்த பிறகு, ‘பவுண்டேஷன்’ பூச வேண்டும்.

நம்முடைய நிறத்திற்கு ஏற்ற பவுண்டேஷன்களை தேர்வு செய்வது கடினம் என்றாலும், அதில் அதீத கவனம் செலுத்தினால் மேக்கப் செய்திருப்பதே தெரியாத அளவிற்கு ‘நீட்’டாக இருக்கும்.

எண்ணெய் பசை தன்மை கொண்டவர்கள், ‘காம்பாக்ட் பவுடர்’ பயன்படுத்துவது நல்லது. கண்களுக்கு கீழ் இருக்கும் கருவிழிகளை ‘கன்சீலர்’ கொண்டு சீராக்கலாம். மேக்கப்பை கூடுதல் பொலிவாக்க, ‘பிரான்சர்’ கொண்டு ஜொலிக்க வைக்கலாம்.

‘கான்டர்’ என்பதை பயன்படுத்துவதன் மூலம் குண்டாக தெரியும் முகத்தை கூட, ஒல்லியாக காட்டமுடியும். மேக்கப் விஷயத்தில் கண் மற்றும் புருவம் மிக முக்கியமானது.

ஏனெனில் கண் புருவங்கள்தான், முக அழகை நிர்ணயிக்கக்கூடியவை. அதை அழகாக்க ‘ஐ புரோ பவுடர்’, ‘ஐ லைனர்’, ‘மஸ்காரா’ போன்றவை புழக்கத்தில் இருக்கின்றன. இறுதியாக உதடுகளை ‘லிப் பாம்’, ‘லிப் லைனர்’, ‘லிப்ஸ்டிக்’ கொண்டு அழகாக்கலாம்.

மேக்கப்பை கலைப்பதற்கு என பிரத்யேக லோஷன் இருக்கிறது. இல்லாதபட்சத்தில் தேங்காய் எண்ணெய் தேய்த்து, மேக்கப்பை கலைக்கலாம்.

இரவு தூங்க செல்லும் முன், கட்டாயமாக மேக்கப்பை கலைக்க வேண்டும். ஏனெனில் மேக்கப் கிரீம் பூசுவதால் அடைக்கப்பட்டிருக்கும் சரும துளைகள் அதற்கு பிறகுதான் சுவாசிக்க ஆரம்பிக்கும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!