எனக்கும் சானியா மிர்சா புருஷனுக்கும் தொடர்பா..? பாக். நடிகை பகீர் தகவல்!

சானியா மிர்சாவின் கணவரை அபகரித்துவிட்டதாக எழுந்த புகார் பற்றி பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஆயிஷா உமர் பேசியிருக்கிறார்.

சானியா மிர்சா

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும், பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கிற்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது.

கடந்த 2018ம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் சானியா. அந்த குழந்தைக்கு இஷான் மிர்சா மாலிக் என பெயர் வைத்தார்கள். இந்நிலையில் சானியாவுக்கும், சோயப் மாலிக்கிற்கும் இடையே பிரச்சனை என்று தகவல் வெளியானது.

விவாகரத்து

இனியும் சேர்ந்து வாழ முடியாது என்கிற முடிவுக்கு சானியா மிர்சாவும், சோயப் மாலிக்கும் வந்துவிட்டார்கள் என்று கூறப்பட்டது. இதையடுத்து அவர்கள் விவாகரத்து பெற முடிவு செய்திருக்கிறார்கள்.

பிரச்சனை பெரிதானதும் சானியாவும், சோயப் மாலிக்கும் தனித் தனியாக வசித்து வருகிறார்கள். சோயப்பின் கள்ளத்தொடர்பாலும் தான் பிரச்சனை என தகவல் வெளியானது.

சோயப்

சோயப் மாலிக்கிற்கும், பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஆயிஷா உமருக்கும் இடையே தொடர்பு ஏறப்பட்டதாக பேசப்பட்டது. ஆயிஷாவால் தான் சானியா, சோயப் இடையே அடிக்கடி சண்டை என்றார்கள். இது குறித்து அறிந்த சானியா மிர்சாவின் ரசிகர்களோ, ஆயிஷா உமரை சமூக வலைதளங்களில் விளாசினார்கள். இந்நிலையில் இது குறித்து முதல் முறையாக பேசியிருக்கிறார் ஆயிஷா உமர்.

ஆயிஷா

சோயப் மாலிக் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் அண்மையில் கலந்து கொண்டார் ஆயிஷா உமர். அந்த நிகழ்ச்சியில் தான் சோயப் மாலிக்குடனான தொடர்பு குறித்து ஆயிஷாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, திருமணமான ஆண் அல்லது கமிட் ஆன ஆளுடன் நான் ஒருபோதும் இருக்க மாட்டேன். என்னை பற்றி அனைவருக்கும் தெரியும் என்றார்.

தொடர்பு

சோயப் மாலிக்கும், ஆயிஷா உமரும் சேர்ந்து கலந்து கொண்ட ஹாட் போட்டோஷூட்டால் தான் அவர்களுக்கு இடையே கள்ளத்தொடர்பு என பேச்சு கிளம்பியது. அது பற்றி ஆயிஷா கூறியதாவது, எங்களை பற்றிய வதந்தியை அடுத்த நாடு மீடியா தான் பரப்பிவிட்டது. அதன் பிறகே என் நாட்டு மீடியா அதை பிடித்துக் கொண்டது என்றார்.

துபாய்

சோயப் மாலிக்கும், சானியா மிர்சாவும் துபாயில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் சோயபுடன் சேர்ந்து இருந்த வீட்டில் இருந்து சானியா வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சோயப் மாலிக்கும், சானியா மிர்சாவும் விவாகரத்து குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!