கள்ளக்காதல் மோகத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குழந்தைகள்!

ஓமலூர் அருகே திருமணத்தை கள்ளக்காதல் மோகத்தால் தனது இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டுச் சென்ற பெண்ணை ஓமலூர் போலீசார் பாண்டிச்சேரியில் கண்டு பிடித்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள செம்மாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சவுண்டப்பன். இவர், தனது வீட்டில் பட்டு நெசவு தறி அமைத்து நெசவு தொழில் செய்து வருகிறார்.

இவருக்கும் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு 9 வயதில் ஆண் குழந்தையும் 7 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

இதேபோல் ஓமலூர் அருகேயுள்ள பொட்டியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தனபால். இவருக்கு மனைவியும் ஒரு மகள் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், சவுண்டப்பன் வீட்டருகே உள்ள பட்டுத்தறி கூடத்தில், தனபால் பட்டு நெசவு செய்யும் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

அப்போது தனபாலும், சவுண்டப்பன் மனைவி லட்சுமிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இருவரும் ஏற்காடு, கொல்லிமலை, மேட்டூர் என பல்வேறு இடங்களுக்குச் சென்று உல்லாசமாக இருந்து வந்தனர்.

இதையடுத்து இருவரும் குடும்பத்தை பிரிந்து செல்ல திட்டமிட்டு தனது இரண்டு குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு லட்சுமி தனபாலுடன் தலைமறைவாகிவிட்டார்.

இதைத் தொடர்ந்து லட்சுமியின் கணவன் ஓமலூர் காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்தனர்.

ஒருவார தேடுதலுக்கு பிறகு பாண்டிச்சேரியில் அறை எடுத்து தங்கியிருந்த கள்ளக்காதல்ஜோடியை கண்டுபிடித்து, ஓமலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அப்போது லட்சுமியை பார்த்து அவரது குழந்தைகளும், கணவரும் தங்களுடன் வருமாறு கதறி அழுதனர். ஆனால், தனக்கு குழந்தைகளும் வேண்டாம், கணவரும் வேண்டாம் என்று கூறிய லட்சுமி, தனது கள்ளக்காதலன் தனபாலுடன் தான் செல்வேன் என்று அடம்பிடித்துள்ளார்.

அப்போது கள்ளக்காதலுடன் அனுப்ப மறுத்த போலீசார், லட்சுமியை அவரது தாயுடன் அனுப்பி வைத்தனர். இதனிடையே தனபாலின் மனைவி, தனது கணவனிடம் தகராறு செய்து தங்களுடன் வருமாறு சத்தமிட்டார் இதையடுத்து போலீசார் தனபாலை மனைவி மற்றும் குழந்தைகளுடன் அனுப்பி வைத்தனர்.

ஆனால், கணவனும் வேண்டாம் குழந்தைகளும் வேண்டாம் என்று கூறிச் சென்ற பெண்ணை பார்த்து அவரது குழந்தைகள் அழுதது காண்போரை கல்நெஞ்சையும் கரைய வைத்தது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!