காதல் மனைவியை ஆச்சரியப்படுத்த வாலிபர் செய்த செயல்…!

மனைவியிடம் அன்பை வெளிப்படுத்த, சிலர் விலையுயர்ந்த பரிசுகளை வழங்குகிறார்கள், சிலர் பூக்களை கொடுக்கிறார்கள். அன்பைக் கையாள ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வழிகள் உள்ளன.

ஆனால் தாய்லாந்தில் வசிக்கும் ஒருவர் தனது மனைவியை மகிழ்விக்க மிகவும் வித்தியாசமான வழியைத் தேர்ந்தெடுத்து உள்ளார். அவர் தனது மனைவிக்கு ஒரு விசித்திரமான பரிசை வழங்கி உள்ளார்.

தாய்லாந்தில் உள்ள அந்த இளைஞர் காதலர் தினத்தன்று தனது மனைவிக்கு வித்தியாசமான பரிசை அளித்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.

தாய்லாந்தின் சரபுரி மாகாணத்தில் கேங் கோய் தாய்லாந்து என்ற பெயரில் பச்சை குத்தும் பார்லர் உள்ளது. இந்த தகவலை அந்த பார்லர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து உள்ளது. தாய்லாந்தைச் சேர்ந்த வால் தனது மனைவிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனித்துவமான பரிசைத் வழங்க திட்டமிட்டார்.

டாட்டூ பார்லருக்குச் சென்று தனது திருமணச் சான்றிதழை அவரது கைகளில் பச்சை குத்திக் கொண்டார். இது காதலுக்கு மிகப்பெரிய சான்று. 8 வருடங்களாக மனைவி மீதான அவரது காதல் உண்மையிலேயே போற்றத்தக்கது. திருமண சான்றிதழை மணிக்கட்டில் முழுதாக பச்சை குத்தி உள்ளார்.

இந்த பச்சை குத்துவதற்கு வால் 8 மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார வேண்டியிருந்தது. அவரது மனைவி பச்சை குத்தியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் ஆச்சரிய ப்டுவதை வால் விரும்பினார்.

வாலின் மனைவி பச்சை குத்துவதை அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாகக் கருதினார். இதற்கிடையில், டாட்டூவைப் பார்க்கும்போதெல்லாம், அவர் தனது மனைவியுடன் கழித்த நல்ல நேரங்களை நினைவுபடுத்துவதாக வால் கூறுகிறார்.

அவர்கள் எப்போதாவது சண்டையிட்டால், அந்த டாட்டுவை பார்க்கும் போது அவர்களின் ஆழமான காதல் தருணத்தை நினைவுபடுத்துவதாக இருக்கும். பின்னர் ஒருவரையொருவர் ஈகோவைக் மறந்து ஒருவரையொருவர் அதிகமாக நேசிக்க தொடங்குகிறோம் என வால் கூறினார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!