நடிகர் மயில்சாமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாதது ஏன்?

மயில்சாமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாததன் ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகரும் குணச்சித்திர நடிகருமான மயில்சாமி நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவரை சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் மயில்சாமி. ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.


நடிகர் மயில்சாமியின் இந்த திடீர் மரணம் அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி ஒட்டு மெபாத்த தமிழ் திரையுலகினரையும் உலுக்கி உள்ளது. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் நேற்று வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் மயில்சாமியின் திடீர் மறைவை ஏற்க முடியவில்லை என கலங்கி வருகின்றனர்.

மாரடைப்பால் மரணம்
சமூக வலைதளங்களிலும் மயில்சாமியின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திடீரென மரணமடைந்த மயில்சாமியின் உடல் ஏன் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் மயில்சாமி ஏற்கனவே இதயம் சம்பந்தமான பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்தது உறுதியாகி உள்ளது.

பிரேத பரிசோதனை இல்லை

மாரடைப்பால் தான் மயில்சாமி மரணமடைந்துள்ளார் என்பது உறுதியானதால் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என தெரிய வந்துள்ளது. 57 வயதே ஆன நடிகர் மயில்சாமி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்தார்.

மிமிக்ரி எனப்படும் பல குரலில் பேசும் திறமையால் பிரபலமான இவர் 1984ஆம் ஆண்டு ‘தாவணி கனவுகள்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் மயில்சாமி.

30 ஆண்டுகள்

அதனை தொடர்ந்து, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஏராளமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் நடிகர் மயில்சாமி.

பல படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களிலும் குணச்சிசத்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ள மயில்சாமி, விவேக், வடிவேலு என பல முன்னணி நகைச்சுவை நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ள நடிகர் மயில்சாமி 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.


மயில்சாமியின் சேவை மனம்

சினிமா படங்கள் மட்டுமின்றி ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். அரசியலும் அதிக ஈடுபாட்டுடன் இருந்த நடிகர் மயில்சாமி, கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.

ஆனால் இந்தத் தேர்தலில் தோல்வியை தழுவினார் மயில்சாமி. உதவும் மனப்பான்மை கொண்ட நடிகர் மயில்சாமி, ஏராளமான ஏழை மக்களுக்கு உதவி செய்துள்ளார். சென்னை வெள்ளம் மற்றும் கொரோனா காலங்களில் அவர் செய்த உதவிகள் பெரிதும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!